ஈரோடு, ஜூலை 1- எட்டு ஆண்டுகளாக குறுவை சாகு படிக்கான இழப்பீட்டை மத்திய மற்றும் கர்நாடக அரசிடமிருந்து பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார். இதுதொடர்பாக ஈரோட்டில் திங்க ளன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரு கல்வி, ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற மோடி அரசின் திட்டம் மாநிலங்களிள் உரிமை கள், ஜனநாயக விதிகளுக்கு மாறானது. பிற மாநிலத்தவர்களை, வேறு மாநிலங் களில் திணிப்பதாகும். இவற்றை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. மேலும், காவிரி நடுவர் மன்ற இறு தித் தீர்ப்பில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி நீர் வழங்கப்பட வேண்டும் என தெரிவித் துள்ளனர். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் கூடி தமிழகத்துக்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய 19 டிஎம்சி, ஜூலை மாதம் 31 டிஎம்சி நீரை உடனடியாக வழங்க வேண்டும் எனக்கூறியும் இன்று வரை தண்ணீர் வழங்கப்படவில்லை. இது குறித்து மாநில அரசும் வலியுறுத்தாமல் வேடிக்கை பார்க்கிறது. காவிரி நீரை திறம்பட பெறாததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த எட்டு ஆண்டுக ளாகக் குறுவை சாகுபடி இல்லை. ஒரு போக சாகுபடியைக்கூட உறுதி செய்ய முடியவில்லை. இதுபற்றி, தமிழக அரசு அறிக்கை தயாரித்து, மத்திய அரசிடமும், கர்நாடகா அரசிடமும் எட்டு ஆண்டு குறு வைக்கான இழப்பீட்டை விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும். இதேபோல், தமிழகத்தின் குடிநீர் பஞ்சம், தேசிய அளவில் கேலிக்கூத்தாகி வருகிறது. செயல்படாத அதிமுக அரசால், சென்னையில் ஒரு டேங்கர் குடிநீர் 1,500 ரூபாயில் இருந்து 9,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கிடையே கடல் நீரை சுத்திகரிப்பு செய்வதற்கான திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். இது 2022ல் தான் செயல்பாட்டுக்கு வரும். இதனைத் தவிர்த்து ஆறு, குளம், ஏரி உள்ளிட்டவைகளை ஆழப்படுத்தி வரும் மழைக்கால நீரை சேமித்து, நிலத்தடி நீரை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், செயல்படாத தமிழக அரசால் உள்ளாட்சி தேர்தலைக்கூட நடத்த முடியவில்லை. இதனால், சாலைகள், மேம்பாட்டுப் பணிகள் நடக்கவில்லை.இதன்காரணமாக விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் சாத்தியக் கூறுகள் தென்படுகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் திட மாக உள்ளது. இதில் எந்த மாற்றத்துக்கும் இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது அக்கட்சி யின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.