tamilnadu

img

கோபி பகுதியில் கனமழை வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரால் பொதுமக்கள் பாதிப்பு

கோபி. நவ, 12- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையம் பகுதியில் திங்களன்று அதிகாலை பெய்த கனமழையினால் வேத பாறை காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கள்ளிப் பட்டி, கணக்கம்பாளையம், பக வதிநகர், கொண்டையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திங்களன்று அதிகாலை முதல் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் அருகிலுள்ள வனப்பகுதிகளிலுள்ள வேதபாறை காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம்  அப்பகுதிகளில் உள்ள தரைபாலங் களை மூழ்கடித்தது. இதனால் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.  மேலும் கணக்கம்பாளையம் பகுதியில் வேதபாறை ஓடையின் அருகில் வசித்து வந்த பத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பொதுமக்களை வருவாய் துறையினர் மீட்டு சமுதாய நலக் கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் பாதிப்படைந்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். இதன்பின் பொது மக்களை சந்தித்து ஆறுதல் தெரி வித்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு வேட்டி, சேலை மற்றும் ரூ.1000 நிவாரணம் வழங்கினார்.இந்நிகழ்வின் போது கோபி வாட் டாட்சியர் ஜெயக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனி ருந்தனர்.