பொள்ளாச்சி நகராட்சி வார்டு வரையறை பட்டியல் வெளியீடு
பொள்ளாச்சி, ஜூன் 6- பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கான வார்டு மறு வரையறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்டு 36 வார்டுகள் உள்ளன. இவ்வார்டுகள் மறு வரையறை செய்யப்பட்டு உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதில்தாழ்த்தப்பட்டோர் பொதுபிரிவுக்கு 8 மற்றும்22 ஆகிய இரண்டு வார்டுகளும், தாழ்த்தப்பட்டோர் பெண்கள் பிரிவுக்கு 2 மற்றும் 31 ஆகிய வார்டுகளும், பெண்கள் பொது பிரிவினருக்கு 1, 3,5,6,7,9,10,11,17,18,23,25,28,29,33 34,ஆகிய வார்டுகளும், பொதுபிரிவினருக்கு 4,12,13,14,15,16,19,20,21,24,26,27,30,32 35 மற்றும் 36 வது வார்டுகள் என தனித்தனியாக வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர்கண்ணன் தெரிவித்துள்ளார்.
சீருடைப்பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி
ஈரோடு, ஜூன் 6-தமிழ்நாடு அரசுப் சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக கூசூருளுசுக்ஷ ஞடீடுஐஊநு ஊடீசூளுகூஹக்ஷடுநு, துஹஐடு றுஹசுனுநுசு & குஐசுநு ஆஹசூ ஆகிய 9000 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு தேதி வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாகஇலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.எனவே, இத்தேர்விற்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்.0424-2275860 வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஜமாபந்தி துவக்கம்
ஈரோடு, ஜூன் 6-ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் வியாழனன்று ஜமாபந்தி தொடங்கியது.ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி நீங்கலாக பத்து தாலுகாவிலும் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி தொடங்கியுள்ளது. ஈரோடு தாலுகாவில் உதவி ஆணையர் (கலால்) சேகர் தலைமை வகித்தார். ஈரோடு வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பானுமதி ஆகியோர் முன்னிலையில் ஜமாபந்தி நடைபெற்றது. நொச்சிபாளையம், தயிர்பாளையம், வேட்டை பெரியபாளையம், பேரோடு, சித்தோடு, சாமிக்கவுண்டன்பாளையம், நசியனுார், எல்லப்பாளையம், திண்டல், வில்லரசம்பட்டி ஆகிய பகுதியை சேர்ந்த வி.ஏ.ஓ., மற்றும் வருவாய் துறையினர், தங்கள் கணக்குகளை சமர்பித்து நேர் செய்தனர். அப்பகுதியைச் சேர்ந்தபொதுமக்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கினார்கள். இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 40 மனுக்கள் பெறப்பட்டன. வெள்ளியன்று கதிரம்பட்டி, தோட்டாணி, புத்துார், புதுப்பாளையம், வேப்பம்பாளையம், கங்காபுரம், ஆட்டையாம்பாளையம் ஆகிய கிராமங்களுக்கும், 11ல் குமிலம்பரப்பு, அணைநாசுவம்பாளையம், பெரிய அக்ரஹாரம், சூரியம்பாளையம், மேட்டுநாசுவம்பாளையம், கரை எல்லப்பாளையம், எலவமலை கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறவுள்ளது. எதிர் வரும் ஜூன் 12ல் பெரியசேமூர், நஞ்சைதளவாய்பாளையம், வைராபாளையம், பி.எஸ்.அக்ரஹரம், பீளமேடு,வெண்டிபாளையம், சூரம்பட்டி, திண்டல், ஈரோடு ஆகிய பகுதிக்கு ஜமாபந்தி நடக்கிறது. ஜமாபந்தி நாட்களில், பொதுமக்கள் மனுக்கள் வழங்கி தீர்வு பெறலாம்.இதுபோல், கோபி, பவானி, பெருந்துறை உட்பட ஒன்பது தாலுகாவிலும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. தாளவாடி தாலுகாவில் வரும் ஜூன் 11ஆம் தேதி ஜமாபந்தி தொடங்குகிறது.