tamilnadu

வீடு புகுந்து நகை கொள்ளை

ஈரோடு, பிப். 18- ஈரோடு பெரியசேமூர், செங்குந்தர் நகர் 3வது வீதியை சேர்ந்தவர் யோகா னந்த் (32). இவர், ஞாயி றன்று தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தின ருடன் சேலத்தில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டார். பின்னர், திங்களன்று வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டுருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள் ளார். இதனையடுத்து வீட் டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப் பட்டிருந்த 4 பவுன் தங்க நகை காணமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து யோகா னந்த் ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித் தார். அப்புகாரின் பேரில் காவல் துறையினர் வழக் குப்திவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்ற னர்.

;