tamilnadu

img

அதிபர் ட்ரம்ப், அமெரிக்க ராணுவத்தை தீவிரவாதிகளாக ஈரான் அறிவிப்பு

ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொலை செய்த அமெரிக்க ராணுவத்தையும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை  தீவிரவாதிகள் என ஈரான் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் ஈராக்கில் உள்ள பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், சுலைமானி கொலை செய்த அமெரிக்க ராணுவத்தையும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை  தீவிரவாதிகள் என ஈரான் அறிவித்துள்ளது.

மேலும், ”ஈரான் ராணுவ தலைவர் சுலைமானி கொடூரமாக கொலைச் செய்யப்பட்டதற்கான பழியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்றுக் கொண்டார். எனவே நாம் அமெரிக்காவுக்கு எதிராக முன்னர் கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் மாற்றம் கொண்டுவர இருக்கிறோம். அமெரிக்க ராணுவம், அமெரிக்க படை தளபதிகள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என அனைவரும் தீவிரவாதிகளாக கருதப்படுவார்கள்” என்று  ஈரான் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் அலி லரிஜானி அறிவித்துள்ளார்.
 

;