tamilnadu

img

இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவங்களுக்கு தற்போது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் கடந்த ஞாயிறன்று நடந்து கொண்டிருந்தபோது, தேவாலயங்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன.

இதையடுத்து நேற்று வாகனத்தில் இருந்த வெடிபொருளை கண்டறிந்து அவற்றை செயலிழக்கச் செய்ய முயன்ற போது எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. நல்வாய்ப்பாக இந்த வெடிவிபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் வெடிகுண்டு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்று அமஹ் நியூஸ் ஏஜென்சியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 


;