காவல்துறை தலைவர் புஜித் ஜெயசிந்தரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டது. மேலும் 10 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை, தாக்குதல் குறித்தும் தெளிவான விபரங்களுடன் எச்சரிக்கை விடுத்தும் இலங்கை நிர்வாகத்தின் அலட்சியத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது.
குண்டுவெடிப்பு தாக்குதலை முறியடிக்க தவறியதால் இலங்கை ராணுவ செயலர், காவல்துறைத் தலைவர் ஆகியோரை ராஜினாமா செய்ய அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார்.அதிபர் சிறிசேனவின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ தன்னுடைய பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதனையடுத்து காவல்துறை தலைவர் புஜித் ஜெயசிந்தரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துவிட்டார்.
புதிய காவல்துறை தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.