tamilnadu

img

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை

சென்னை, செப். 18- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்ட செய்திக்குறிப்பில், வளி மண்டல சுழற்சி காரணமாக தமி ழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த  24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், சிவ கங்கை, புதுக்கோட்டை உட்பட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புண்டு. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப் படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் முதல் நாகப்பட்டி னம் வரையிலான வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக் கூடும்  என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 15 செ.மீ. மழை  பதிவாகி உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.