சென்னை, மார்ச் 27- மத்திய மாநில அரசுகளின் ஊர டங்கு உத்தரவால் வேலை இழந்து பரிதவிக்கும் தையல் கலைஞர்க ளுக்கு ரூபாய் 5000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ் நாடு தையல் கலைஞர்கள் சம் மேளனம் கோரிக்கை விடுத்தி ருக்கிறது. இதுகுறித்து சங்கத்தின் தலை வர் ப.சுந்தரம் பொதுச்செயலாளர் எம் .ஐடாஹெலன் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமிக்கு எடுத்திருக்கும் கோரிக் கையில் கூறியிருப்பதாவது:-
உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. தமிழகத்தில் மக் களை பாதுகாக்க, தாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை வர வேற்கிறோம். இந்த நோயிலிருந்து தமிழ கத்தை பாதுகாக்க அனைவரும் சுயக் கட்டுப்பாட்டில் வீடுகளி லேயே தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் அரசு வலி யுறுத்தியுள்ளது. இதனை ஏற்று ஏழை, எளிய மக்கள் வீடுகளி லேயே உள்ளனர். உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவை களுக்காக தொழிலாளர் நல வாரி யத்தில் பதிவு செய்த கட்டுமா னம், ஆட்டோ, சாலையோர வியா பாரிகள், உள்ளிட்ட தொழிலாளர் களுக்கு நிவாரண நிதியாக ரூ. 1000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
தையல் தொழிலில் ஈடுபடுப வர்கள் பெரும் பகுதி பெண்களா கும். அதிலும் கணவனால் ைவிடப்பட்டவர்கள், விதவைப் பெண்கள் மிகவும் ஏழ்மை நிலை யில் உள்ளனர். எனவே வாரி யத்தில் பதிவு செய்த ,தையல் கலைஞர் களுக்கு நிவாரணமாக ரூ.5000 வழங்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக் கிறார்கள்.