விழுப்புரம், மே 4- விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 125 எட்டி உள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை செய்த கூலி தொழிலாளர்கள் வேலை இழந்ததால் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இத னால் விழுப்புரம் மாவட்டத்தில் 11 கிரா மங்களை தனிமைப்படுத்தி வைரஸ் பரவா மல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கோயம்பேட்டில் வேலை செய்த நூற்றுகணக்கான கூலித் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு வந்து கொண்டு இருப்ப தால் மாவட்ட மக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கோயம்பேடு சந்தையில் வேலை செய்து ஊருக்கு திரும்பும் கூலி தொழிலாளர்களை அடையாளம் கண்டு சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்காமல் அங்கேயே தடுத்து நிறுத்தி தனிமைப்படுத்தும் நட வடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில், பாதிராபுலியூர், ஆசூர், கொள்ளார், ரெட்டணை, விழுக்கம் ஆகிய கிராமத்தை சேர்ந்த கோயம்பேடு தொழிலா ளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியா னால் விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் பீதியடைந்துள்ளனர்.