tamilnadu

img

இஸ்லாமிய தலைவர்களுடன் இன்று அரசு ஆலோசனை

சென்னை, மார்ச் 13- திருத்தப்பட்ட குடி யுரிமை சட்டம் தொடர்பாக  இஸ்லாமிய தலைவர்களு டன் தமிழக அரசு மார்ச் 14  அன்று ஆலோசனை நடத்து கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரி வித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து குடி யுரிமை திருத்தச் சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என கேரளா உள்ளிட்ட பல மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது. இந்தநிலையில் சென்னை வண்ணாரப் பேட்டையிலும் இஸ்லாமி யர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். குடியுரிமை திருத் தச் சட்டத்துக்கு எதிராக தமி ழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி 30வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் குடி யுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு மார்ச் 14  அன்று ஆலோ சனை நடத்துகிறது. தலை மைச் செயலகத்தில் மாலை 4 மணிக்கு அரசு தலைமைச் செயலாளர் க. சண்முகம் ஆலோசனை நடத்துகிறார். கூட்டத்தில் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான தங்களது கருத்துக்களை கூறுமாறு தலைமைச் செயலாளர் க. சண்முகம் அழைப்பு விடுத் துள்ளார்.