மதுரை, ஏப்.30- மதுரை மாவட்டத்தில் சிறு அப்பள (மிஷின்) உற்பத்தியாளர்கள் 25 ஆயிரம் பேர் உள்ளனர். குறிப்பாக சிந்தா மணியில் 10 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் கொரோனா பரவலால் வேலையிழந்து தவிக்கின்றனர். பெரிய அப்பள நிறுவனங்கள் சமூக இடை வெளியோடு அப்பளம் உற்பத்தி செய்கின்றன.
நாள்தோறும் சுமார் 100 பேர் பணியாற்றி வருகின்றனர். ஆனால், சிறு உற்பத்தியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுதியளிக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் அனுமதித்தால் நாங்கள் குறைந்தளவாக நாளொ ன்றுக்கு ஐந்து பேரை வைத்து சமூக இடைவெளியோடு சுழற்சிமுறையில் உற்பத்தியைத் தொடங்க தயாராக உள்ளோம்.
ஒரு தொழிலாளி நாளொன்றுக்கு ரூ.300 முதல் ரூ500 வரை சம்பள மாகப் பெறுவார். அப்பளத்தை கட்டுபோடும் தொழிலாளி ரூ.800 சம்பளமாகப் பெறுவார். கொரோனா பாதிப்பால் வேலையிழந்து தவிக்கும் தொழிலாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களோடு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.