tamilnadu

img

கார்-லாரி மோதல்: 5 பேர் பலி

திருவண்ணாமலை, ஆக. 13- திருவண்ணாமலையில் கார்-லாரி நேருக்கு நேராக மோதிய விபத்தில் 5 பேர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருவண்ணாமலை அய்யம்பாளை யத்திலிருந்து கர்நாடகாவுக்கு சென்று கொண்டிருந்த காரில் 2 பெண் உட்பட 5 பேர்  பயணம் செய்தனர். அப்போது எதிர்பாராத  விதமாக எதிரே வந்த லாரி, நேருக்கு நேராக  கார் மீது மோதியதில் காரில் பயணம் செய்த  2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக பலியாகினர். இச்சம்ப வம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த  காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும், இந்த விபத்து குறித்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;