tamilnadu

img

பெல்ஜியத்தில் வேகமாகப் பரவும் கொரோனா... ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்டோர் பலி 

பிரஸ்ஸல்ஸ் 
மேற்கு ஐரோப்பா பகுதியில் ஒன்றரை கோடி மக்கள் தொகையைக் கொண்ட குட்டி நாடான பெல்ஜியத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அங்கு இதுவரை 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2500-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 5000-க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியனர்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பெல்ஜியத்தில் 1500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், அந்நாட்டு அரசு கொரோனவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.  
 

;