tamilnadu

img

ஒரே நாளில் 7000 பேருக்கு கொரோனா....  ரஷ்யாவில் இதுவரை இல்லாத வகையில் அதிக பாதிப்பு 

மாஸ்கோ 
உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு புதிய அவதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பாவின் புதிய கொரோனா மையமாக உருவெடுத்துள்ள ரஷ்யாவில் தினமும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்வதால் அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். 

இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்யாவில் 7 ஆயிரத்து 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்த பாதிப்பு 1 லட்சத்து 6 ஆயிரத்து 498 ஆக உள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 101 பலியாகியுள்ளனர். இதன் மூலம் பலி  எண்ணிக்கை 1,073 ஆக உயர்ந்துள்ளது. ஆறுதல் செய்தியாக 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர். குறிப்பாக ரஷ்யாவில் பெரும்பாலும் ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தைத் தாண்டாது. ஆனால் இன்று ஒரே நாளில் 7 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது ஐரோப்பா கண்டத்தில் பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளது.
 

;