tamilnadu

img

நாடாளுமன்றத்தில் காதலைச் சொன்ன இத்தாலி எம்.பி!

இத்தாலி நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. ஒருவர், தன் காதலியிடம் காதலை வெளிப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.

இத்தாலி நாட்டு லீக் கட்சியின் எம்.பியான ஃப்ளாவியோ டி முர்ரோ (33), கடந்த வியாழன் அன்று பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பங்கேற்றிருந்தார். விவாதத்தின் போது இடைமறித்து கருத்து சொல்ல அவகாசம் கோரும் வாய்ப்பைப் பயன்படுத்த அனுமதி கோரினார் முர்ரோ. இதை அடுத்து, தனது மேஜையினுள் இருந்து ஒரு பரிசுப் பெட்டியை எடுத்து அதிலிருந்த மோதிரத்தை எடுத்து உயர்த்திப் பிடித்து பார்வையாளர் அரங்கில் இருந்த எலிஸா டி லியோ என்ற இளம் பெண்ணை நோக்கி தனது காதலை வெளிப்படுத்தினார். இதற்கு அரங்கமே கரகோஷம் எழுப்பியது.

இருப்பினும் சபாநாயகர் ராபர்ட் ஃபிகோ, "உங்களின் உணர்வுகள் எனக்குப் புரிகிறது ஆனால் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இவ்வாறு இடையூறு செய்வதை ஏற்க இயலாது" என்றார். ஆனால், சக எம்.பி.க்கள் தங்களின் இருக்கைகளின் இருந்து எழுந்து வந்து டி முரோ - எலீஸா தம்பதிக்கு வாழ்த்துகள் தெரிவித்த மகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
 

;