tamilnadu

img

ஆந்திரா விஷவாயு விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

ஆந்திராவில் விஷவாயு கசிவினால் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினம் நகரில் ஆர்.ஆர். வேங்கடாபுரம் கிராமத்தில் உள்ள எல்.ஜி பாலிமர்  ரசாயன தொழிற்சாலை ஊரடங்கால் மூடப்பட்டு உள்ளது.  இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென ஆலையில் இருந்து ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிந்துள்ளது.  இதனால் அந்த பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு கண்களில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டதுடன், சுவாச பாதிப்புகளும்  வாந்தி மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 
இந்த விபத்தில் குழந்தை உள்பட  10 பேர் பலியாகி உள்ளனர்.   இதையடுத்து   அந்த பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்டோர்  மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  இந்த விபத்தில் சுமார் 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.