tamilnadu

img

திருமானூர் பாஸ்கரன் மீது வழக்குப் பதிந்து கைது செய்வது உறுதி: டி.எஸ்.பி தகவல்

அரியலூர், ஆக.1- அரியலூர் மாவட்டம் திமானூரில் இயங்கி  வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய  அலுவலகத்தின் மேற்கூரை மற்றும் தளவாடப்  பொருள்கள் அனைத்தையும் சேதப்படுத்திய பாஜக பிரமுகர் பாஸ்கரன் மீது புகார் கொடுத்து  நீண்ட நாட்கள் ஆகியும் காவல்துறை நடவ டிக்கை எடுக்கவில்லை.  நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகா ரிகளை கண்டித்து திருமானூர் பேருந்து நிலை யம் முன்பு ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.சாமி துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. குழு உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.இளங்கோ வன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் அர்புனி தன், ஏ.சவுரிராஜன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.  இந்நிலையில் அரியலூர் டிஎஸ்பி மாவட்ட  செயற்குழு உறுப்பினர் எம்.இளங்கோவனை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘ஆர்ப்பாட்ட த்தை முடித்து கொள்ளுங்கள்.. இரண்டு நாட்களில் வழக்கு பதிவு செய்து பாஸ்கரன் கைது செய்வது உறுதி’ என உறுதி அளித்த தால் ஆர்ப்பாட்டத்தினை முடித்து கொண்டனர்.