tamilnadu

img

பாபநாசம் கிளை நூலகத்திற்கு சொந்த கட்டடம் கிடைக்குமா?

பாபநாசம் கிளை நூலகத்திற்கு  சொந்த கட்டடம் கிடைக்குமா?

பாபநாசம், அக்.24 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கிளை நூலகம் தற்போது பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வாடகையின்றி இயங்கி வருகிறது. முழு நேர கிளை நூலகமான இது காலை 8 முதல் இரவு 8 முதல் இயங்கி வருகிறது.  இந்த நூலகத்தில் சமயம், சிறுவர் கதைகள், நாவல், சமயம், கட்டுரை, மருத்துவம் உள்ளிட்ட பல தலைப்புகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. 5,500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நூலகத்திற்கு தினமும் 60 பேர் வரை வந்து செல்கின்றனர்.  போட்டித் தேர்விற்கான புத்தகங்கள் இருந்தும், படிப்பதற்கான வசதி இல்லாததால் பலர்  தஞ்சாவூர், கும்பகோணம் செல்கின்றனர். இந்த நூலகத்தில் கழிப்பறை வசதிகூட கிடை யாது.  இந்த நூல கத்தில் 3 பேர் பணியில் உள்ள னர். இதில் 2 பேர் பெண்கள். இதுவரை வாடகை கட்டடத்தில் மட்டுமே இயங்கி வரும் பாபநாசம் கிளை நூலகத்திற்கு சொந்த கட்டடம் கிடையாது.  தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள கல்யாணசுந்தரம், வாசன், சுதா ஆகியோர் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது நூலகத்திற்கு வருபவர்களின் கருத்தாகும்.  மேலும் வாசகர்கள் கூறுகையில், “மைதானத்தில் துர்நாற்றம் வீசுகிறது. கிரிக்கெட் விளையாடுபவர்களின் சத்தத்தால் படிக்க முடியவில்லை” என்கின்றனர்.