tamilnadu

img

போரை நிறுத்த ஒப்புதல் ஈரான் பதிலடியால் பணிந்த டிரம்ப்பும் இஸ்ரேலும்!

போரை நிறுத்த ஒப்புதல் ஈரான் பதிலடியால் பணிந்த டிரம்ப்பும் இஸ்ரேலும்!

டெஹ்ரான், ஜூன் 24 - 12 நாட்களாக நீடித்து வந்த ஈரான்-இஸ்ரேல் மோதலானது கத்தாரின் உதவியால் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த  போர் நிறுத்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.  தனது ட்ரூத் சமூக ஊடக பதி வில், “அனைவருக்கும் வாழ்த்துகள். இஸ்ரேலும் ஈரானும்  முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண் டன. இன்னும் 6 மணிநேரத்தில் மோதல் நிறுத்தப்படும். 24 மணிநேரத்தில் போர் அதிகாரப்பூர்வமாக முடிவடையும்” என அவர் தெரிவித்திருந்தார். போர் நிறுத்தத்திற்கான பேச்சு வார்த்தை நடத்திய முக்கிய நாடாக கத்தார் பணியாற்றியது. இதனை இஸ்ரேல், ஈரான் அதிகாரிகள் உறுதிப் படுத்தினர். ஈரானும் அந்நாட்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.  போர் நிறுத்தம் குறித்து செய்தி வெளியிட்ட ஈரான் அரசு தொலைக் காட்சி, டிரம்ப் கெஞ்சியதை தொடர்ந்து இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.  இதன் மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தங்கள் ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது என்பதற்காக ஈரானுக்கு பயங்கரமான பதிலடி கொடுக்கப்படும். இலக்கை அடையும் வரை ஈரான் மீது தாக்குதல் தொடரும் என நேதன்யாகு மிரட்டி வந்தார். எனினும் மறைமுகமாக அரபு நாடுகளின் மூலமாக போர் நிறுத்த பேச்சு வார்த்தையை முன்னெடுக்க அவர் முயற்சித்து வந்தார் என்பதை அமெரிக்க பத்திரிகை ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.

 தாக்குதலுக்கு காரணம்

ஜூன் 13 அன்று ஈரான் மீது “ரைசிங் லையன்” என்ற பெயரில் சர்வதேசச் சட்டங்களை மீறி திடீரென இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் தலைமை தளபதிகள், தலைமை அணு விஞ்ஞானிகள் என பலரையும் படுகொலை செய்தது. மேலும் ஈரானின் அணு சக்தி நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் அளவுக்கு யுரேனியத்தை செறிவூட்டி வைத்துள்ளது என அந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணம் கூறியது. அமெரிக்காவும் அதனையே கூறியது. ஆனால் ஈரான் தாங்கள் முன்னெடுத்து வருகிற யுரேனிய செறிவூட்டல் செயல்முறையானது எங்கள் உள்நாட்டு வளர்ச்சி சார்ந்த தேவைகளுக்கானது. எங்களுக்கு அணுகுண்டு செய்யும் திட்டம் இல்லை என்று கூறியது.  

பதிலடி நடவடிக்கை  

ஆயினும் இஸ்ரேலின் தாக்கு தலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப் படும் என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்காப்பு நடவடிக்கை யாக ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-III என்ற பெயரில் ஈரான் ராணுவம் தாக்குதலை துவங்கியது.  இஸ்ரேலின் வான் பாது காப்பு அமைப்புகளையும் மீறி துல்லிய மான தாக்குதலை நடத்தியது.  குறிப்பாக இஸ்ரேலின் பொருளா தார கட்டமைப்புகளான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பல  அடுக்குமாடி கட்டடங்கள், மைக்ரோ சாப்ட் நிறுவனம், பங்கு வர்த்தக கட்ட டம், இஸ்ரேலின் ஏற்றுமதி இறக்கு மதி அதிகமாக நடைபெறும் ஹைபா  துறைமுகம் ஆகியவற்றை துல்லிய மாகத் தாக்கி அதிர்ச்சியைக் கொடுத் தது.  இத்தகைய தாக்குதலை எதிர் பாராத இஸ்ரேல் மிரண்டு போய் தன்னை தற்காத்துக்கொள்ள அமெ ரிக்காவை போருக்குள் இழுத்தது. அமெரிக்கா போரில் ஈடுபடுவது

குறித்து இரண்டு வாரங்களில் முடி வெடுக்கும் என டிரம்ப் அறிவித்தார். ஆனால் அவர் பேசிய இரண்டாவது நாளிலேயே திடீ ரென சர்வதேசச் சட்டங்களை மீறி ஈரானின் மூன்று அணு சக்தி நிலையங்கள் மீது குண்டுகளை வீசி அமெரிக்கப்  படைகள்தாக்கின.

அமெரிக்க ராணுவத்தளம்  மீது தாக்குதல்  '

இந்த தாக்குதலால் கடும் கோபமடைந்த ஈரான், இஸ்ரேல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது. மேலும் ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இது உலகப் பொரு ளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் என அச்சம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஜூன் 23 அன்று கத்தாரில் அமைத்துள்ள அல் உதெய்ட் என்ற அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப்படைத்தளம் மீது 6-9 ஏவுகணை களை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்கு தலுக்கு முன்பாகவே கத்தார் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு ஈரான் தகவல் தெரிவித்து விட்டதால் பெரும் உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை. எனினும் இதனால் மத்திய கிழக்கு முழுவதும் மிகப்பெரிய போர் பதற்றம் பரவியது. இந்நிலையில் அதற்கு மறுதினமே போர் நிறுத்தம் அமலா வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.  முன்னதாக இந்த தாக்குதலின் போது டிரம்ப் வெளியிட்ட பதிவில், ஈரான் நடத்தி யது மிகவும் பலவீனமான தாக்குதல் என கூறினார். எனினும் தாக்குவதற்கு முன் ஈரான் கொடுத்த எச்சரிக்கைக்கு நன்றி எனவும் தெரிவித்திருந்தார்.

 உயிரிழப்புகள்  

இரு நாடுகளுக்கும் இடையிலான போரில் இஸ்ரேல் வெளியிட்டுள்ள தகவ லின்படி  25 நபர்கள் பலியாகியுள்ளனர். சுமார் 2,400 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஈரான் தாக்குதலால் இஸ்ரேலில் ஏற்படும் பதிப்பு கள் குறித்த காணொலிகளையோ செய்திகளை யோ யாரும் வெளியிடக்கூடாது என இஸ்ரேல் அரசு உத்தரவிட்டுள்ளதால் உண்மை யான மதிப்பீடு தெரியவில்லை.   ஈரானில் 639 முதல் 900 க்கும் அதிக மான மக்கள் இஸ்ரேல் தாக்குதலால் படு கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

யுரேனிய செறிவூட்டல் நடக்கும்  

அமெரிக்காவின் குண்டு வீச்சில் இருந்து ஈரான் தங்களது யுரேனியத்தை பாது காத்துக்கொண்டது. தாக்குதலில் சேதம டைந்த கட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்து அணுசக்தி திட்டத்தை மீண்டும் செயல் பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம். அதற்கு நாங்கள் தேவையான நடவடிக்கை களை எடுத்துள்ளோம் என அந்நாட்டு அணுசக்தித் தலைவர் முகமது எஸ்லாமி தெரிவித்துள்ளார்.

இறையாண்மையை டிரம்ப்பிடம் அடகு வைக்காத ஈரான்

 போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்ட போது, இஸ்ரேலும் ஈரானும் ஒரே நேரத்தில் தன்னிடம் வந்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என முறையிட்டன. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன என  குறிப்பிட்டார்.  இதற்கு உடனடியாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மறுப்பு தெரிவித்தார். ஒரு முறையான போர் நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன என டிரம்ப் கூறியதை மறுத்தார். போர் நிறுத்தம் நடைமுறைக்கு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு அராக்சி வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்த சண்டை யை ஈரான் துவங்கவில்லை. இஸ்ரேல் தான் ஈரானுக்கு எதிராகப் போரைத் துவங்கியது என கண்டித்திருந்தார்.  மேலும், ஈரான் சண்டையை நிறுத்து வதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இஸ்ரேல்  ஈரானின் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் தனது தாக்குதல்களை நிறுத்தி னால், ஈரானும் தனது எதிர்த்தாக்குதலை நிறுத்தும் என்று தெரிவித்திருந்தார்.

இரு தரப்பும் நடத்திய தாக்குதல்

 இரண்டு நாடுகளும் போர் நிறுத்தம் அமலாகும் நேரத்திற்கு முன்பு வரை தாக்கு தல் நடத்திக் கொண்டன. குறிப்பாக ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளை பலவீனப் படுத்தும் வகையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.  அராக்சி வெளியிட்ட மற்றொரு அறிக்கை யில், கடைசி நிமிடம் வரை தொடர்ந்த ஈரான் ராணுவத்தின் நடவடிக்கைகளை பாராட்டி நன்றி தெரிவித்தார். மேலும்  நாட்டை தங்கள் கடைசித் துளி இரத்தம் இருக்கும் வரை பாதுகாக்க வேண்டும். எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். இவ்வாறு கடைசி நிமிடம் வரை ஈரானும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்திக்கொண்டன.  இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறி விட்டதாகவும், ஈரான் தலைநகர் மீது பயங்கரமான தாக்குதல் நடத்தப்படும் என வும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் போர் வெறியோடு பேசியுள்ளார்.   ஆனால் போர் நிறுத்தத்தை மீறி ஈரான் தாக்குதல் நடத்தவில்லை என இஸ்ரேலின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

ஈரான் மீது குண்டு வீசக்கூடாது : இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

இந்நிலையில் நேட்டோ உச்சி மாநாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன் பேசிய டிரம்ப்  இரு நாடுகளும் ஒப்பந்தத்தை மீறி விட்டன என குற்றம் சாட்டினார். இரு நாடுகளின் மீதும் மகிழ்ச்சி இல்லை. குறிப்பாக இஸ்ரேல் மீது மகிழ்ச்சி இல்லை. அது போர் நிறுத்தத்தி ற்கு ஒப்புக்கொண்ட உடனேயே அதனை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது என குற்றம் சாட்டினார்.  ஈரான் தலைநகர் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் உத்தரவிட்ட பிறகு ஈரான் மீது மீண்டும் குண்டு வீச வேண்டாம் என இஸ்ரேலுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், இஸ்ரேல் அந்த குண்டுகளை வீச வேண்டாம். குண்டு வீசினால் அது மிகப்பெரிய விதி மீறல்.உங்கள் விமானிகளை இப்போதே உங்கள் நாட்டிற்கு திரும்ப அழையுங்கள். ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.