tamilnadu

img

துறை சார்ந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

துறை சார்ந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, நவ. 5 - பொது மற்றும் மறுவாழ்வுத் துறை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை ஆகிய  துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், அறிவிப்பு களின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலை மையில் நடைபெற்றது. பொது மற்றும் மறுவாழ்வுத்துறை ஆய்வுக் கூட்டத் தில், அயல்நாடுகளில், வெளிமாநிலங்களில் பணிக்கு சென்று அங்கு எதிர்பாராதவிதமாக இறக்கும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டம், சுயதொழில் தொடங்க ஆர்வமாக வுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம், இலங்கைத் தமிழர்களுக்கு பாது காப்பான, தரமான தங்குமிடங்களை வழங்கும்  நோக்கத்துடன் இரண்டாம் கட்டமாக 18 மாவட்டங்க ளில் உள்ள 34 முகாம்களில் 3919 வீடுகள் கட்டித்  தரும் திட்டம், முன்னாள் படைவீரர்கள் தங்குவதற் கான புதிய விடுதி கட்டும் பணி போன்ற பல்வேறு அறி விப்புகளின் தற்போதைய நிலை குறித்து முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 2021-2022 முதல் 2025-26 வரை பொது மற்றும்  மறுவாழ்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட 90 அறிவிப்புகளில், 68 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், முடிவுறும் தருவா யில் உள்ள ஏனைய அறிவிப்புகள் தொடர்பான பணி களை விரைந்து நிறைவேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம், பசுமை தமிழ்நாடு இயக்கம், வன விலங்கு களுக்கான அவசர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு தேவைகளுக்கென மூன்று உயர் வனவிலங்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் கோயம் புத்தூர், திருநெல்வேலி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் அமைப்பது குறித்தும், சென்னைக்கு  அருகில் தாவரவியல் பூங்கா அமைப்பது குறித்தும்,  மரக்காணத்தில் பன்னாட்டுப் பறவைகள் மையம், தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் கடற்பசு பாது காப்பு மையம், திண்டுக்கல் வனக்கோட்டம் அய்யலூ ரில் தேவாங்கு பாதுகாப்பு மையம், பழவேற்காடு ஏரிப் பகுதியில் சூழலியல் சுற்றுலா வசதிகள் ஏற்படுத் துவது போன்ற பல்வேறு அறிவிப்புகளின் தற்போ தைய நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு கூட்டங்களின்போது, முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த இரு துறைகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் அனைத் தையும் துரிதமாக முடித்து, மக்களின் பயன்பாட்டிற் காக விரைவாக கொண்டு வர வேண்டும் என்று அலு வலர்களை அறிவுறுத்தினார்.