கும்பல் வல்லுறவு கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கோவைச்
கோவையைச் சேர்ந்த சிறுமி 7 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நட்பாகப் பழகி வன்கொடுமை
கோவையில் 17 வயதுச் சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த கும்பல் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. கோவையைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் சமூக வலைதளங்களில் நட்பாக பழகிய இளைஞர் ஒருவர், அச்சிறுமியை தான் தங்கியிருக்கும் இடத்திற்கு வரவழைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து கும்பல் பாலி யல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ள னர். இச்சம்பவத்தில் இருவேறு கல்லூரிகளில் பயிலும் 7 மாண வர்கள் போக்சோ பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மட்டும் போதுமானதல்ல. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளி களைத் தீர விசாரித்திடவும், இவர்கள் இதுபோன்று வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா?, வேறு நபர்கள் யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு அனை வரின் மீதும் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
சமூக வலைதளம் மூலம் நட்பாகப் பழகி பெண்களை பாலியல் ரீதி யாக கொடுமைகளுக்கு உள்ளாக்கு வதைத் தடுப்பதற்கு காவல்துறை உரிய விழிப்புணர்வையும், இது போன்ற வழக்குகளைப் பதிவு செய்யும் போது பத்திரிகைகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவும் வேண்டும். அதற்கு மாறாக, காவல்துறையினர் பிரச்சனைகளை வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ளும் போக்கு, இதுபோன்ற குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கே வழி வகுக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். தமிழகத்தில் பள்ளிச் சிறுமிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் பணியிடங்களிலும், பொதுப் போக்கு வரத்துக்களிலும் பாலியல் கொடுமை களுக்கு ஆளாகும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. இக்கொடுமைகளை முற்றி லும் ஒழிப்பதற்கு தமிழக அரசு கறாரான நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும், தேவையெனில் காவல்துறையின் செயல்பாட்டை முறைப்படுத்திட வேண்டும்.
போதைப் பொருட்களை தடுக்க வேண்டும்!
இதுபோன்ற வன்கொடுமை களுக்கு போதைப்பொருள் ஒரு முக்கியக் காரணியாக உள்ளது. எனவே, தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையை ஒழித்திடவும், படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைப்ப தற்கும் தமிழக அரசு உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் சூழலில் மாநில குழந்தைகள் ஆணையத்திற்கு உடனடியாக தலைவரை நியமனம் செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய இழப்பீடு தொகை வழங்குவதுடன், அவருக்கு உரிய கவுன்சிலிங் சிகிச்சை அளித்து தொடர்ந்து அச்சிறுமி விரும்பும் கல்வி பயில் வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.