இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் சென்னை வந்தனர்
சென்னை: இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15 மீன வர்கள், கடந்த பிப்ரவரி, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தனித்தனியே 3 விசைப் படகுகளில் நடுக்கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களை இலங்கை கடற்படை யினர் கைது செய்து, படகு, வலைகள் மற்றும் மீன்களை பறி முதல் செய்தனர். பின்னர் 15 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதங்கள் எழுதினார். இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அங்குள்ள இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில், 15 மீனவர் களையும் இலங்கை நீதிமன்றம் படிப்படியாக விடுவித்து, அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப் பட்டு தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பின்னர் விமான டிக்கெட் உள்பட பல்வேறு ஏற்பாடுகளை செய்து, கொழும்புவில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா பயணி கள் விமானத்தில் 15 மீனவர்களும் அனுப்பி வைக்கப் பட்டனர். அவர்கள் வெள்ளியன்று காலை சென்னை வந்த னர். அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள், அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம் சொ