tamilnadu

img

திரைப்படக் கலைஞர் ராஜேஷ் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

திரைப்படக் கலைஞர் ராஜேஷ் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது;

திரைப்படக் கலைஞர் ராஜேஷ் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

‘அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், அந்த ஏழு நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை உட்பட 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியின் முதல்வராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.  தீவிரமான வாசிப்பாளரான அவர், இடதுசாரி இயக்கங்களின் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.