சென்னை,டிசம்பர்.19 - தமிழ்நாடு முழுவதும் 34 உயர்மட்ட பாலங்கள் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 18 மாவட்டங்களில் ரூ.177.85 கோடியில் 34 உயர் மட்ட பாலங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லால்குடி அருகே வென்றார்பேட்டை சாலையில் ரூ.10 கோடிக்கும், நெல்லை மானூர் வட்டம் வெங்கடாசலபுரம் பிரான்சேரி சாலைஉயில் சித்தாறு ஆற்றில் ரூ.10.63 கோடியிலும் பாலம் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.