tamilnadu

img

யூரியா தட்டுப்பாடு: மாநில அரசுக்கு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்

சென்னை, நவ.8- தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி யூரியா கிடைக்க போர்க்கால  அடிப்படையில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பருவமழை இந்த ஆண்டு போதுமான தாக இருக்குமென்று வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து தெரிவித்து வந்தது, சில  தாலுகாகளில் போதுமான மழை பெய்ய வில்லை என்றாலும் தமிழ்நாட்டின் பெரும்  பகுதியான இடங்களில் மழை பெய்துள்  ளது. இதனால் விவசாயிகள் விவசாயப் பணி களில் உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர்.

குறிப்  பாக சம்பா சாகுபடி முழு வீச்சில் நடை பெற்றுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் யூரியா உரம் கிடைக்காமல் விவ சாயிகள் பெரும் அலைக்கழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு இந்த ஆண்டு எவ்வளவு உரம் தேவைப்படும் என்பதை முன் கூட்டியே கணக்கிட்டு இறக்குமதி செய்து இருப்பு வைக்காமல் அலட்சியமாக இருந்ததே இத்தகைய நெருக்கடிக்கும், பற்றாக்குறைக்கும் காரணமாகும் என்று  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சுட்டிக்காட்டு கிறது.

உரிய காலத்தில் உரம் இடாமல் போனால் நட்ட பயிர்கள் பாதிக்கப்படும். நல்ல  மழை பெய்தும் போதுமான நீர் இருந்தும் உற்பத்தி பாதிக்கப்பட்டால் அதற்கு தமிழக அரசின் அக்கறையற்ற போக்குதான் அடிப்படை காரணமாகும். எனவே, உடனடியாக தமிழகம் முழுவ தும் தேவையான யூரியா விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க போர்க்கால அடிப்  படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. கடைகளில் உரங் களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றால் அவற்றை பறிமுதல் செய்து விவ சாயிகளுக்கு விநியோகிக்க அரசு நடவ டிக்கை எடுக்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் சண்முகம்  தெரிவித்திருக்கிறார்.