tamilnadu

வேகமெடுக்கிறது கொரோனா

விருதுநகர், ஜூன் 23- விருதுநகர் மாவட்டத்தில்  செவ்வாயன்று 25 பேருக்கு தொற்று இருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. விருதுநகர் ரயில்வே பீடர் சாலையைச் சேர்ந்த 63 வயது  வழக்கறிஞர், அருப்புக்கோட்டை தும்முசின்னம்பட்டியைச் சேர்ந்த 37 வயது நபர், ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த 23 வயது நபர், திருச்சுழி ஆலபடிபட்டியைச் சேர்ந்த இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள், மித லைக் குளத்தைச் சேர்ந்த இருவர், சிவங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பெண், விருதுநகர் வட மலைக் குறிச்சியைச் சேர்ந்த 23 வயது இரு பெண்கள்,  பாண்டியன் நகரைச் சேர்ந்த 27 வயது பெண், கே.கே.எஸ்.எஸ்.என் நகரைச் சேர்ந்த 30 வயது ஆண்,  கீழகட்ட னூரைச் சேர்ந்த 24 வயது பெண், திருச்சுழியைச் சேர்ந்த 27 வயது ஆண், மேலவரகுணராமபுரத்தைச் சேர்ந்த 68 வயது ஆண், 20 வயது பெண், சீலம்பட்டியைச் சேர்ந்த இரு பெண்கள், சிப்பிபாறையைச் சேர்ந்த 43 வயது ஆண் உட்பட மொத்தம் 25 பேருக்கு தொற்று இருப்பது மூலம் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் அமைச்சர் இராஜேந்திர பாலாஜி விருது நகர் மாவட்டத்தில்   முழு ஊர டங்கிற்கு வாய்ப்பில்லை . கொரோனா  வைரஸ் கட்டுக்குள் உள்ளது. வெளி மாநிலத்தில்  இருந்து வந்தவர்களால்  மட்டுமே  வைரஸ் பாதிப்பு உள்ளது என செய்தியாளர்களிடம் செவ்வா யன்று கூறினார். உண்மை வேறு... அமைச்சர் கூறுவது வேறு... விருதுநகர் மாவட்டத்தில் மதுரைக்கு ஈடான வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. ஆட்சியர் யதார்த் தத்தை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.