வாலிபர் சங்கம் எச்சரிக்கை
சென்னை, பிப். 11- தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 5 ஆயி ரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் செய்தியா ளர்களை சந்தித்த சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, “தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தும் 81 லட்சம் பேர் வேலை யில்லாமல் காத்திருப்பதால் வேலையின்மை 8.1 விழுக்காடாக அதிகரித்துள்ளது” என்றார்.
தற்கொலையில் 2வது இடம்
வேலை கிடைக்காததால் ஏற்படும் நெருக்கடியால் இளை ஞர்களின் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலையில்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலங்க ளில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பதை மத்திய அரசு வெளியிட்டுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு புள்ளி விபரம் தெரிவித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதிமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு வேலை வழங்கு வோம் என்று அறிவித்தது. அதில் என்ன முன்னேற்றம், வேலை வாய்ப்பு பிரச்சனையை தீர்ப்பது குறித்து இதுவரை எடுத்த நட வடிக்கைகள் என்ன என்பதை சட்டமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அரசு தயாரா? என் றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சிபிஐ விசாரணை
தமிழ்நாடு அரசுப் பணியா ளர் தேர்வாணையம் ஊழல் மையமாக மாறியுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையமும் இந்த பட்டி யலில் சேர்ந்துள்ளதால் இது வரை நடைபெற்ற தேர்வுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழக அரசின் ஊழல் மற்றும் நிர்வாகத் திறமை யின்மையால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. பொதுத்துறை நிறு வனங்களில், அரசுப் பள்ளிகளில் என 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு அரசு எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பாலா குற்றம்சாட்டி னார். ஜிஎஸ்டி அமலாக்கத்தால் தொழில்துறை பெரும் சரிவை சந்தித்துள்ளது. ஆட்சியாளர்க ளின் தவறான கொள்கைகளால் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 90 லட்சம் பேர் வேலையிழந்துள்