சென்னை, செப். 18- சென்னையில் பேனர் விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் ஆறுதல் கூறினார். சென்னை அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ, கடந்த வியாழக்கிழமை அன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பேனர் சரிந்து விழுந்த தில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது லாரி ஏறியதில் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக பலியானார். பேனர் வைத்த அதிமுக அரசியல் கட்சி பிரமுகர் ஜெய கோபால் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால் இன்னும் கைது செய்யப் படாத நிலையில், லாரி ஓட்டுநர், பேனர் அடித்த வர் என அனைவரும் கைது செய்யப் பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் விளைவாக அரசியல் கட்சித் தலை வர்கள் தாங்களாக முன்வந்து கட்சி நிகழ்ச்சி களில் பேனர் வைக்கவேண்டாம் என அறிக்கை வெளியிட்டனர்.
இதனிடையே, சுபஸ்ரீயை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். புதன்கிழமை காலை சுபஸ்ரீ இல்லத்திற்குச் சென்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சுபஸ்ரீக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் சுபஸ்ரீயின் தாய் தந்தைக்கு ஸ்டா லின் ஆறுதல் கூறினார். திமுக அறக்கட்டளை சார்பில் சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி யுதவிக்கான காசோலையையும் வழங்கினார். பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், சுபஸ்ரீயின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. சுபஸ்ரீயின் தந்தை ரவி, என்னி டத்தில் சொன்னது, “இதுவே கடைசியாக இருக்கட்டும். என்னுடைய மகள் சுபஸ்ரீயை இந்த பேனர் கலாச்சாரத்தால் இறந்திருப்பது கடைசியாக இருக்கட்டும். இனியும் தொட ரக்கூடாது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திடவேண்டும்” என்று உணர்ச்சிகரமாக சொன்னது உள்ளபடியே மறக்க முடியாதது என்றார். சுபஸ்ரீயை இழந்து வாடிக் கொண்டி ருக்கும் அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறு தல் கூறி இருக்கிறேன். என்ன தான் ஆறுதல் கூறினாலும் அந்த இழப்பை ஈடு செய்யமுடி யாது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், முடிந்த வரையில் அவர்களை நாங்கள் ஆறுதல் படுத்தியுள்ளோம். உயர்நீதிமன்ற தடை உத்தரவை மீறி அவர்கள் தொடர்ந்து வைத்துக் கொண்டி ருக்கிறார்கள். ஏற்கெனவே கோவை மாவட்டத்தில் ரகு என்கிற ஒரு சகோதரர் பலி ஆனார். இப்போது சுபஸ்ரீ என்கிற ஒரு சகோதரி பலியாகி இருப்பது வேதனை அளிக்கிறது என்றும் ஸ்டாலின் கூறினார். என்னைப் பொறுத்தவரையில் பேனர் கலாச்சாரம் தொடரக்கூடாது என்பதுதான் விருப்பம். சுபஸ்ரீயை இழந்து வாடிக் கொண்டி ருக்கும் அவரது குடும்பத்தாருக்கு தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சம் உதவித் தொகையை வழங்கியிருக்கிறோம் என்றார் அவர்.