மும்பை, பிப்.1- மத்திய நிதிநிலை அறிக் கையால் பங்குச்சந்தை முத லீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில் சனிக் கிழமை பங்குச்சந்தை வர்த்தகம் 987.96 புள்ளிகள் சரிவில் முடிந்தது. நிதியமைச்சரின் அறி விப்புகளில் முதலீட்டாளர்க ளுக்கு லாபம் அளிக்கத்தக்க எவ்வித அம்சங்களும் இடம் பெறவில்லை என நிதித்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சனி யன்று காலை உயர்வை சந்தித்து, மாலையில் வர்த்த கம் முடிவடைந்தபோது மிகப் பெரிய வீழ்ச்சி அடைந்தது. ‘சென்செக்ஸ்’ 987.96 புள்ளி கள் சரிந்து 39,735.53 புள்ளிக ளில் நிறைவடைந்தது. இதே போல் ‘நிப்டி’ 300 புள்ளிகள் சரிந்து 11,662 புள்ளிகளில் நிறைவடைந்தது.குறிப்பாக, எஸ்.பி.ஐ. ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் 6.3 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டது. ஐ.சி.ஐ.சி.ஐ. ஆயுள் காப்பீடு நிறுவ னத்தின் பங்குகள் 6.6 சதவீதம் அளவுக்கும், எச்.எப்.டி.சி. ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் 3.4 சதவீதம் அள வுக்கும் வீழ்ச்சி அடைந்தன.