மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 1 முதல் 10ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெறுகிறது. அதன் ஒருபகுதியாக சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கார்த்திஷ்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் திங்களன்று (ஜூலை 3) சந்தா பெற்றனர்.