மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது வருகிறது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தாவை வழங்கினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ் ஆகியோர் உடனிருந்தனர்.