tamilnadu

img

எழுபது வயதில் மறதியில்லாமல் வாழ உதவும் ஆரோக்கிய உணவு - சிதம்பரம் ரவிச்சந்திரன்

சிறிய வயதில் நாம் உண்ணும் ஆரோக்கியமான உணவு எழுபது வயதில் புத்திக் கூர்மையுடன் டிமென்சியா போன்ற மறதி நோய்கள் இல்லாமல் வாழ நமக்கு உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு எழுபது ஆண்டுகளாக பிரிட்டன் மக்களிடையில் நடத்தப்பட்டது. வயதாகும்போது ஏற்படும் உணவு மற்றும் அறிவாற்றல் மாற்றங்களை மையமாகக் கொண்டு முன்பு பல ஆய்வுகள் நடந்தன.

குழந்தையாக இருக்கும்போது நாம் உண்ணும் உணவு

ஆனால் ஒருவரின் வாழ்க்கை முழுவதையும் ஆராயும்வகையில் இந்த புதிய ஆய்வு நடத்தப்பட்டது. அவருடைய நான்கு வயது முதல்  எழுபது வயது வரை உள்ள மாற்றங்கள் ஆரா யப்பட்டன. உணவிற்கும் வயதாகும்போது ஏற்படும்  ஆரோக்கியமான வாழ்விற்கும் இடையில் சிறு வயதில் இருந்தே தொடர்பு உண்டு என்பது இதன்  மூலம் தெரியவந்துள்ளது. இந்த தொடர்பு வாழ்வின் பிற்காலத்தில் இருந்தே தொடங்குகிறது என்று முன்பு கருதப்பட்டது. சிறிய வயதில் உண்ணும் ஆரோக்கியமான உணவு முதுமையில் அல்சைமர்ஸ் (Alzheimer’s)  நோய் வராமல் தடுக்கிறது என்று இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. முதுமையுடன் தொடர்புடைய அறிவாற்றல் குறைவை இது தாமதப்படுத்துகிறது. இந்த ஆய்வின் விவரங்கள் சமீபத்தில் நடந்த அமெரிக்க சத்துணவு சங்கத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. “சிறிய வயதில் பின்பற்றப்படும் ஆரோக்கிய மான உணவு முறைகள் ஒருவருடைய வாழ்க்கை  முழுவதும் அவரது ஆரோக்கியத்தை நிலை நிறுத்துகிறது. இது இப்போது பரிந்துரைக்கப்படும் பொது ஆரோக்கிய உணவிற்கான வழிகாட்டு தல்களை ஆதரிக்கிறது. நடுத்தர வயது வரை ஒருவர் உண்ணும் உணவில் நடைமுறைப்படுத்தும் ஆரோக்கியமான மாற்றங்கள் முதுமையில் அவரது அறிவாற்றல் குறைவதை தடுக்கிறது ” என்று மாசாசூசெட்ஸ் டஃப்ஸ் (Tufts) பல்கலைக்கழக ஆய்வாளர் கெல்லி காரா (Kelly Cara) கூறுகிறார். நடுத்தர வயது வரை அறிவாற்றல் முன்னேற்ற மடைகிறது. ஆனால் பிற்கால வாழ்வில் குறிப்பாக  65 வயதுக்கு பிறகு அது குறைய ஆரம்பிக்கிறது. அந்த வயதில் இதனுடன் சேர்ந்து முதுமை தொடர்பான டிமென்சியா போன்ற மோசமான ஆரோக்கியப் பிரச்சனைகளும் ஏற்படத் தொடங்கு கிறது. யு கே தேசிய ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி  ஆய்வு (National survey of Health and Development) என்று பெயரிடப்பட்ட இந்த ஆய்வில் குழந்தையாக இருக்கும்போதே பதிவு செய்துகொண்ட 3,059 பேர் பங்கேற்றனர். இவர்கள் 1946 பிரிட்டனில் பிறந்த ஆய்வுப் பங்காளிகள் (coharts) என்று அழைக்கப்பட்டனர்.

தரமான உணவு உயர்வான அறிவாற்றல்

இவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு பற்றிய  விவரங்கள், ஒவ்வொரு கட்டத்திலும் அறி வாற்றலில் ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் பிற தகவல்கள்  வினா விடை முறை மற்றும் 75 ஆண்டுகளுக்கும் கூடு தலாக அவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனை களின் முடிவுகள் மூலம் அடிப்படைத் தரவுகள் பெறப்பட்டன. உணவுகள் பற்றிய ஐந்து காலக்குறி யீடுகளுக்கும் (time points) ஏழு காலக்குறியீடு களுக்கும் இடையில் இருக்கும் தொடர்புகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. உணவுகளின் தரம் அறிவாற்றலுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருக்கிறது என்பது  இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. தரக்குறை வான உணவை எடுத்துக்கொண்ட 8% பேர்  மட்டுமே பிந்தைய வாழ்வில் உயர்ந்த அறிவாற்றலு டன் விளங்கினர். தரமான உணவை எடுத்துக் கொண்ட 7% பேர் மட்டுமே குறைவான அறி வாற்றலைப் பெற்றிருந்தனர். அறிவாற்றல் வாழ்க்கைத்தரம் மற்றும் முதுமை யில் சுதந்திரமான வாழ்வில் முக்கியப்பங்கு வகிக்கி றது. எடுத்துக்காட்டாக எழுபது வயதில் அறி வாற்றலை குறைவாக வெளிப்படுத்திய குழுவினரு டன் ஒப்பிடும்போது உயர் அறிவாற்றலை வெளிப்படுத்திய குழுவினர் முந்தைய வாழ்வில் இருந்த நினைவாற்றல், செயல்படுத்தும் வேகம்  மற்றும் பொதுவான அறிவாற்றல் செய்திறனை தக்கவைத்துக்கொள்கின்றனர் என்று கண்டறி யப்பட்டுள்ளது. அறிவாற்றலை குறைவாக வெளிப்படுத்திய 25% பேரிடம் டிமென்சியாவிற்கான அறிகுறிகள் தோன்றின. இதே காலகட்டத்தில் அறிவாற்றலை அதிகமாக பெற்றவர்கள் டிமென்சியாவிற்கான அறி குறிகளை வெளிப்படுத்தவில்லை. இளமைப்பரு வத்தில் பெரும்பாலோர் தங்கள் உணவு முறை யில் ஆரோக்கியமான மாற்றங்களை செயல் படுத்துகின்றனர். குழந்தையாக இருக்கும்போது ஒருவர் உணவின் தரத்தில் மேற்கொள்ளும் சிறிய மாற்றங்கள் கூட அவரது பிற்கால வாழ்வின்  உணவு முறையை தீர்மானிக்கிறது. முந்தைய வாழ்வில் உண்ணும் உணவில் எடுக்கப்படும் தீர்மானம் பிற்கால வாழ்க்கையின் உணவுகளில் தாக்கத்தைச் செலுத்துகிறது. உணவு  மற்றும் காலத்தின் ஒன்றுதிரட்டிய பயன்கள் உலக ளாவிய அறிவாற்றல் முன்னேற்றத்துடன் தொடர்பு டையது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் உயர் அறிவாற்றல் திறன்களை வெளிப்படுத்தியவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது காய்கறிகள், பழங்கள், லெகும்கள் மற்றும் முழு தானி யங்கள் போன்ற பரிந்துரைக்கப்பட்ட ஆரோக்கிய மான உணவுகளை அதிகமாகவும் சோடியம், சர்க்கரை சேர்க்கப்பட்டவை மற்றும் சுத்திக ரிக்கப்பட்ட தானியங்களை குறைவாகவும் எடுத்துக்  கொள்பவர்களாக இருந்தனர்.

ஆரோக்கியமான வாழ்விற்கு

பச்சை இலைகள், காய்கறிகள், பீன்ஸ், முழுப் பழங்கள், முழுமையான தானியங்கள் போன்ற முழு அல்லது குறைவான பதப்படுத்தப்பட்ட தாவர  உணவுகளை எடுத்துக்கொண்டவர்கள் நோய்களில் இருந்து அதிக பாதுகாப்பு பெற்றிருந்த னர். எந்த வயதில் எடுத்துக்கொள்ளத் தொடங்கி னாலும்இத்தகைய உணவுகளை ஒருங்கி ணைக்கும்வகையில் ஒருவர் செயல்படுத்தும் மாற்றங்கள் அவருடைய அறிவாற்றல் உள்ளிட்ட பிந்தைய வாழ்வின் ஆரோக்கியத்தை பல வழி களில் மேம்படுத்துகிறது. குழந்தைப் பருவத்தில் நாம் உண்ணும் உணவு பிற்காலத்தில் எவ்வாறு நமக்கு ஆரோக்கியமான வாழ்வைத் தருகிறது என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. அத னால் இளம் வயதில் சத்துள்ள உணவுகளை உண்பதை ஊக்குவிப்போம்.