13 பேருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு
சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், ஆன்-லைன் முன்பதிவு திட்டத்தின் மூலம், அனைத்து நாள்களிலும் பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், அரசுப் பேருந்து களில் பயணித்து தேர்ந்தெடுக்கப்படும் பயணிகளுக்கு மாதந் தோறும் ரொக்கப் பரிசு மற்றும் பரிசுப்பொருள்கள் வழங்கப் பட்டு வருகிறது. அந்த வகையில், ஏப்ரல் மாதத்துக்கான 13 பயணிகளை மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர், கணினி குலுக்கல் முறை யில் வெள்ளிக்கிழமை தேர்வு செய்தார். அதன்படி தேர்ந்தெடுக் கப்பட்ட முதல் 3 பயணிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம், மீதமுள்ள 10 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.50 ஆயி ரம் ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கான பரிசுத் தொகை விரைவில் வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரி வித்தனர்.
தடையின்றி தடுப்பூசி
சென்னை: தமிழகத்தில் உள்ள 6,144 சுகாதார மையங்க ளில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அட்டவணை தடுப்பூசி களை தடையின்றி வழங்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் மரு. செல்வவிநாயகம் அறிவுறுத்தியிருக் கிறார். மேலும், இதற்கான பயிலரங்குகள் பல்வேறு மாவட்டங் களிலும், அதன் தொடர்ச்சியாக பொது சுகாதாரத் துறை தலை மையகத்தில் நடத்தப்பட்டன. இதன் மூலம் தடுப்பூசி சேவை கள் ஆக்கப்பூர்வமாக கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மருந்து ஏற்றுமதி நிறுத்தம்
சென்னை: இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக் கும் பதற்றம் காரணமாக, உயிர் காக்கும் முக்கிய மருந்துகளுக் கான மூலப்பொருட்கள் எதுவும் இனி தமிழகத்திலிருந்து அங்கு அனுப்பப்பட மாட்டாது என்று மாநில மருந்து உற்பத்தி யாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இதன் காரண மாக ரூ.100 கோடி வரை தங்களுக்கு இழப்பு ஏற்பட்டாலும், நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்து உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தோழர் நல்லகண்ணு வீடு திரும்பினார்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் இரா.நல்லகண்ணு (100), சென்னை நந்தனத்தில் உள்ள வீட்டில் கழிப்பறைக்குச் செல்ல எழுந்த போது நிலை தடுமாறி தவறி விழுந்து காயமடைந்தார். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவ ருக்கு மருத்துவமனை முதல்வர் மருத்துவர் சாந்தாராமன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். தற்போது, குணமடைந்ததால் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
நலமடைந்தார் அமைச்சர் துரைமுருகன்
சென்னை: திமுக பொதுச் செயலாளரும், அமைச்சரு மான துரைமுருகன் (86), நெஞ்சு பகுதியில் அசவுகரியம் மற்றும் சளி தொற்று காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
தோனி தொடர்ந்த வழக்கு
சென்னை: ஐபிஎல் சூதாட்ட வழக்கில் தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் கூறிய தாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியா கார்ப்பரேஷன், இந்தி செய்தி தொலைக்காட்சியான நியூஸ் நேஷன் நெட்வொர்க் பிரைவேட் லிமிட்டெட் உள்ளிட்டோருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி கடந்த 2014 ஆம் ஆண்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கேள்வி களுக்கு பதிலளிக்குமாறு ஜீ தொலைக்காட்சி மற்றும் நியூஸ் நேஷன் நெட்வொர்க் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஜீ தொலைக்காட்சி பதிலளித்தது. ஆனால், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, நியூஸ் நேஷனல் நெட்வொர்க் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனு நீதிபதி நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தோனி தரப்பில் ஆஜ ரான மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன், கேள்விகளுக்கு பதிலளிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக் கூடாது என்று கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நியூஸ் நேஷனல் நெட்வொர்க் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.