tamilnadu

img

ராசிபுரம் பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை

நாமக்கல், ஜுலை 12- நாமக்கல் மாவட்டம் ராசி புரம் நகராட்சி 13 ஆவது வார்டு  பெண் கவுன்  சிலர் தேவிப் பிரியா, அவரது கணவர் அருண் லால்,  மகள் மோனிஷா ஆகிய மூவரும் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்  பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் நகர திமுக துணை செயலாள ராக இருப்பவர் அருண் லால் (53). இவர் நகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தேவிப்பிரியா (46). இவர் ராசி புரம் நகர் மன்றத்தின் 13-ஆவது வார்டு  திமுக உறுப்பினராக உள்ளார். இவர் களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு  மகள் பெங்களூரில் பணியாற்றி வருகிறார்.  மற்றொரு மகள் மோனிஷா (18) உயி ரிழந்த மோனிஷா ராசிபுரம் தனியார் பள்ளி யில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்த நிலை யில் இவர்கள் வீட்டிலேயே அருண்லால், தேவிப்பிரியா, மோனிஷா ஆகிய மூவரும்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள் ளது தெரியவந்துள்ளது. இது குறித்து தக வல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த ராசிபுரம் டிஎஸ்பி டி.கே.கே. செந்தில்  குமார், காவல் ஆய்வாளர் சுகவனம் உள்ளிட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்சனை காரண மாக, மூவரும் தற்கொலை செய்து கொண்ட தாகக் கூறப்படுகிறது.