சென்னை, நவ.10- தமிழகத்தில் பட்டாசு ஆலை விபத்துக்களுக்கு தமிழ்நாடு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மதுரை மாவட்டம், உசி லம்பட்டி அருகே அழகுசிறை கிரா மத்தில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உடல் சிதறி உயி ரிழந்துள்ளனர், 12-க்கும் மேற் பட்டோர் படுகாயங்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்த தொழிலாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இச்சம்பவம் அறிந்த உடனே, கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மதுரை புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட செயலா ளர்கள் கே. ராஜேந்திரன், மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் ஆர்.விஜயராஜன், எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ். பாலா ஆகியோர் சம்பவம் நடந்த இடத் திற்கு நேரில் சென்று, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்க ளைச் சந்தித்து ஆறுதலை தெரி வித்தனர்.
வறுமையின் பிடியில் மாட்டிக் கொண்ட பெரும்பாலான கிராமப் புற மக்கள் வேறு வழியில்லாமல் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வரு கின்றனர். பட்டாசு ஆலைகளில் இவர்களுக்கான பாதுகாப்பை முறையாக மேற்கொள்வ தில்லை. ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள் அனைத்து வெடி பொருட்களுக்கான மூலப்பொருளை கண்காணிக்கவும், உற்பத்திக்கு தகுந்தவாறு தொழில் செய்வ தற்கான இடங்கள், தொழிலாளர் கள் பணியமர்த்தல் மற்றும் உரிய பாதுகாப்பு போன்ற அம்சங்களை முறையாக கண்காணிக்க வேண் டும். ஆனால் அரசு அதிகாரிகள் இப்பணிகளை முறையாக மேற் கொள்ளாமலும், பட்டாசு உரிமை யாளர்களுக்கு ஆதரவாக கண் டும்காணாமலும் இருப்பதே இது போன்ற விபத்துகள் தமிழகத்தில் தொடர்வதற்கும், மனித உயிர் கள் மடிவதற்கும் முக்கிய கார ணமாகும். இதுகுறித்து பல முறை சுட்டிக்காட்டப்பட்டும் கறா ரான நடவடிக்கைகள் மேற்கொள் ளாததன் விளைவே இதுபோன்ற விபத்துகள் தொடர்கின்றன என் பதை சுட்டிக்காட்ட விரும்பு கிறோம். எனவே, தமிழகத்தில் பட்டாசு விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. உயிரிழந்த தொழிலாளர களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். இருப்பினும் இழப்பீட்டு தொகை யை கூடுதலாக்கி ரூ. 25 லட்சம் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.
வெடி விபத்து நடந்த இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ்.பாலா, எஸ்.கே. பொன்னுத்தாய், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செ.முத்து ராணி, தா. செல்லக்கண்ணு, வி.பி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் முத்துப்பாண்டி, கிளைச் செயலாளர் குருசாமி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர் அழகுசிறை கிராமத்திற்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் பார்த்து கே.பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறினார்.