tamilnadu

img

சென்னையில் நுரையீரல் உயர் ரத்த அழுத்த சிகிச்சை மையம் திறப்பு!

சென்னையில் நுரையீரல் உயர் ரத்த  அழுத்த சிகிச்சை மையம் திறப்பு!

சென்னை, மே 29 –  சென்னை வடபழனியில் உள்ள  காவேரி மருத்துவமனையில் நுரையீரல் தொடர்பான உயர் ரத்தஅழுத்தப் பிரச்சனைக்காக பிரத்தியேக மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது.  அனைத்து வயதிலும் உள்ள நுரையீரல் சார் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கான முழுமையான மருத்துவ, அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சை தொடர்பான சோதனை, நிர்வாகம் மற்றும் அவர்களின் உடல் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருதல் என அனைத்தையும் இம்மையம் கவனித்துக்கொள்ளும் என்று காவேரி மருத்துவ மனையின் இதயஅறுவை சிகிச்சைத்துறையின் தலை வர் மருத்துவர் அன்பரசு மோகன்ராஜ் கூறினார். “இப்புதிய மருத்துவ மையம், நுரையீரல் தொடர்பான சிக்கலான நோய்களுக்கு சிகிச்சைய ளிக்கும். எடுத்துக்காட்டாக, முற்றிய ரத்தக் கட்டியால் ஏற்படும் நுரையீரல் அழுத்த நோய் (CTEPH) ஆகிய அபூர்வ பிரச்சனைகளை குறிப்பிடலாம் என்றும் அவர் தெரிவித்தார். துவக்க நிகழ்ச்சியில்  முதுநிலை இதய ஊடுருவல் அறுவை சிகிச்சை வல்லுநருமான பேராசிரியர் பி. மனோகர் பல துறைகளை இணைத்து இந்த மையம் உருவாக்கப் பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் முதுநிலை மருத்துவர்கள், மருத்துவமனையின் தலைமை அலுவலர்கள், மருத்துவத்துறை வல்லுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.