tamilnadu

img

நாகையில் இஸ்லாமிய பெண் மருத்துவரிடம் ஹிஜாப்பை அகற்றுமாறு மதவெறியர் அட்டூழியம்

நாகப்பட்டினம், மே 25- நாகப்பட்டினம் மாவட்டம் திருப் பூண்டி அரசு  மருத்துவமனையில் பணி புரியும் இஸ்லாமிய பெண் மருத்துவரி டம், ஹிஜாப் உடையை நீக்கக் கூறி  அட்டூழியத்தில் ஈடுபட்ட பாஜக பிர முகரைக் கண்டித்தும், கைது செய்யாத  காவல்துறையை கண்டித்தும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழை யூர் ஒன்றியம் திருப்பூண்டி அரசு மருத்  துவமனையில் ஜன்னத்து பேகம் என்ப வர் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் புதன்  கிழமை இரவு நோயாளி ஒருவர்  நெஞ்சுவலி காரணமாக மருத்துவ மனைக்கு வந்துள்ளார். அவரைப் பரி சோதித்த மருத்துவர் பேகம், நெஞ்சு வலியின் தீவிரத்தை உணர்ந்து, அவரை நாகை அரசு தலைமை மருத்து வமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரைத்திருக்கிறார்.  அப்போது அங்கு வந்த பாஜக வைச் சேர்ந்த புவனேஸ்வரராம் என்ப வர் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். மருத்துவர், நோயா ளியின் தன்மை கருதி அவரை உடனடி யாக தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது தான் நோயாளிக்கு நல்லது என்று கூறி இருக்கிறார்.  இதைக் கேட்க மறுத்த புவ னேஸ்வரராம், மருத்துவரை இழி வாகப் பேசி அவர் அணிந்திருந்த ஹிஜாப் உடையை நீக்கக் கூறியும், மருத்துவமனையில் பணிபுரியும் போது எதற்கு ஹிஜாப் அணிந்து இருக்கிறாய் என்றும் தகராறு செய்து, மருத்துவமனை ஊழியர்களையும் இழிவாக பேசியிருக்கிறார். 

இந்த நிலையில் அவர் மீது கீழை யூர் காவல் நிலையதில் புகார் அளிக்  கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக கூறப்படு கிறது. சம்பந்தப்பட்ட நபரை உடனடி யாக கைது செய்ய வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை புவனேஸ்வரராம் கைது செய்யப்படவில்லை.  இந்நிலையில், மதவெறியுடன் அட்டூழியம் செய்த புவனேஸ்வ ரராமை கைது செய்யாத காவல்துறை யை கண்டித்து திருப்பூண்டி மூலக் கடையில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாகை  மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்பிரமணியன், என்.எம்.அபுபக்  கர், கீழையூர் கிழக்கு ஒன்றியச் செய லாளர் எம்.அப்துல் அஜீஸ், மாவட்டக் குழு உறுப்பினர் கே.சித்தார்த்தன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஒ.எஸ்.இப்ராஹிம் உள்  ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்ட னர்.  இதையடுத்து காவல்துறையினர் குற்றவாளியை உடனடியாக கைது செய்வதாக கூறியதின் பேரில் சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

;