tamilnadu

img

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு

சென்னை, அக்.21- நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்த மாணவருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட்  தேர்வை திண்டிவனத்தைச் சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் எழுதினார். இத் தேர்வில் கேட்கப்பட்டிருந்த தவறான கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்காமல் தவிர்த் துள்ளார். நீட் தேர்வில் பட்டியலின வகுப்பைச்  சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டி ருந்தது.  இந்நிலையில் 92 மதிப்பெண்கள் பெற்ற  மாணவர் உதயகுமார், தான் விடையளிக்கா மல் தவிர்த்த கேள்விக்கு கருணை மதிப் பெண் வழங்கக் கோரி ஒன்றிய அரசுக்கும், தேர்வு முகமைக்கும் மனு அனுப்பினார். அவரது மனு பரிசீலிக்கப்படவில்லை.  இதையடுத்து, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கேள்வியை தவிர்க்காமல் ஏதாவது ஒரு விடையை அளித்திருந்தால் மட்டுமே கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும் என  தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.  இதனைத்தொடர்ந்து, இந்த விதியை எதிர்த்து புதிதாக வழக்கு தொடர அனுமதி கோரி, வழக்கு திரும்பப் பெறப்பட்டது. புதி தாக வழக்கு தொடர அனுமதி பெறாமல், அதே கோரிக்கையுடன் மீண்டும் தொடரப் பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மாணவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்  முறையீட்டு வழக்கு பொறுப்பு தலைமை  நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ண குமார் ஆகியோர் அடங்கி அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பு களைச் சேர்ந்த விளிம்புநிலை மக்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அரசியல் சாசனம் தெரிவிக்கிறது எனச்  சுட்டிக்காட்டியதுடன், பாதிக்கப்பட்ட மாணவ ருக்கு கருணை மதிப்பெண்களாக நான்கு மதிப்பெண்கள் வழங்க” உத்தரவிட்டனர். மேலும், திருத்தியமைக்கப்பட்ட மதிப் பெண் சான்றிதழை மாணவருக்கு வழங்க உத்தரவிட்டனர். இத்துடன், மாணவருக்கு ஏற்பட்ட சூழலைக் கருத்தில் கொண்டு பிறப் பிக்கப்பட்ட இந்த உத்தரவை முன்னுதாரண மாக கருதக் கூடாது எனவும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.