செவிலியர், சிற்பம், பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்படும்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு
மிழ்நாடு சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் பண்பாட்டுக் களஞ்சி யங்களாக திகழ்கின்றன” என்றார். தமிழ்நாட்டின் வரலாறு, மிகப் பழமையும் பெருமையும் வாய்ந்தது என்பதற்கு முக்கிய காரணம் வரலாற்று சின்னங்களாக வும், கலைத்திறனின் அடையாளங் களாகவும் அமைந்தது கோவில்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். சொத்துக்கள் மீட்பு வேட்டை தொடரும் தங்க முதலீட்டு திட்டத்தின்கீழ் மொத்தம் 21 கோவில்களில் 10,74, 123,488 ரூபாய் முதலீடு செய்யப் பட்டுள்ளது என்றும், இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்த மான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வரு கிறது. சென்னையில் ஒரு இடத்தில் மட்டுமே ரூ.250 கோடி மதிப்பி லான 150 கிரவுண்ட் நிலம் மீட்கப் பட்டது. கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மீட்கும் வேட்டை தொடரும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இதைத் தொடர்ந்து 232 புதிய அறிவிப்பு களை வெளியிட்டார். இதில் முக்கிய அறிவிப்புகள் வருமாறு: ஒரு கால பூஜை திட்டத்தின்கீழ் உள்ள 19 ஆயிரம் கோவில்களுக்கு ரூ.15 கோடியில் பூஜை உபகரணங்கள் வழங்கப்படும். ரூ. 25 கோடி அரசு மானியத்தில் ஒரு கால பூஜை திட்டம் இந்த ஆண்டு ஆயி ரம் கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும். ஒரு கால பூஜை திட்டம் கோவில் அர்ச்சகர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 உயர்த்தி வழங்கப்படும். கோவில்கள் சார்பில் இந்த ஆண்டு ஆயிரம் இணைகளுக்கு ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசைகளுடன் திருமணம் நடத்தி வைக்கப்படும். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ் தானம் கோவில்கள் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவுக்காக தற்போது வழங்கப்பட்டு வரும் அரசு மானியம் 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 8 ஆயிர மாக உயர்த்தப்படும். மாணவர்களுக்கு இலவச உணவு பழனி முருகன் கோவில் சார்பில் நடத்தப் பட்டு வரும் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு அனைத்து நாட்களிலும், மூன்று வேளைகளில் கட்டணம் இல்லாமல் உணவு வழங்கப்படும். ரூ.225 கோடியில் பணிகள் ஓதுவார் காலிப் பணியிடங்கள் நிரப்பப் படும். தமிழ்நாடு முழுவதும் ஏழு நிலை ராஜ கோபுரங்கள் இரண்டு, ஐந்து நிலை ராஜ கோபு ரங்கள் நான்கு, மூன்று நிலை ராஜகோபுரங்கள் ஏழு, என மொத்தம் 13 புதிய ராஜகோபுரங்கள் ரூ. 29 கோடியில் கட்டப்படும். மேலும், துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1907 கோவில்களில் ரூ.25 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். சாலைகள் விரிவாக்கம் திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி முரு கன் கோவில் சாலை விரிவாக்கத்திற்காக ரூ. 67 கோடி அரசு மானியம் வழங்கும். திருத்தணி முரு கன் கோவிலில் மாற்று வழிப் பாதைக்கு அரசு சார்பில் ரூ. 57 கோடி நிதி ஒதுக்கப்படும். பாயாசம்-வடை நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் மற்றும் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் இணைத்துக் கொள்ளப்படும். மேலும் இந்தத் திட்டத்தில் இனி வழக்கமான உணவுடன் வடை மற்றும் பாயாசம் சேர்த்து வழங்கப்படும். ஊக்கத் தொகை உயர்வு கோவில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சி பள்ளிகளில் முழுநேர வகுப்பு மாண வர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த நாலா யிரம் ரூபாய் உதவித்தொகை 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல் பகுதிநேர வகுப்பு மாணவர்களுக்கு 2 ஆயிரத்திலிருந்து, 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். திருச்செந்தூர், திருவரங்கம், இரா மேஸ்வரம் உள்ளிட்ட 10 கோவில்களில் முக்கிய விழா நாட்களில் தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும். சிலைகள்... ஈரோடு மாவட்டம் திண்டல் வேலாயுத சுவாமி கோவிலில் புதிதாக ரூ.30 கோடியில் 180 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும். ராணிப் பேட்டை மாவட்டம், ஆற்காடு குமரகிரி திமிரி சுப்பிர மணிய சுவாமி கோவிலில் புதிதாக 114 அடி உயர முருகன் சிலை ரூ.7 கோடியில் நிறுவப் படும். கோவை மாவட்டம் மருதமலை முரு கன் கோவிலில் 184 அடி உயர முருகன் சிலை ரூ.110 கோடியில் அமைக்கப்படும். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய இரண்டு கோவில்கள் சார்பாக புதிதாக செவிலி யர் கல்லூரிகள் அமைக்கப்படும். திருச்சி திரு வரங்கம் அரங்கநாதர் கோவில் சார்பாக புதிதாக கோவில் கட்டிடக் கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி அமைக்கப்படும். கோயம்புத்தூர் மருத மலை முருகன் கோவில் சார்பாக புதிதாக பல் தொழில்நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக் கல்லூரி) அமைக்கப்படும்.