tamilnadu

img

நீர், மோர் வழங்கி வரவேற்ற இஸ்லாமியர்கள்

நீர், மோர் வழங்கி வரவேற்ற இஸ்லாமியர்கள்

சங்மேஸ்வர கோவில் சித்திரை தேரோட்டம்

கோவை, மே 10- கோவையில் சங்கமேஸ் வரர் கோவில் சித்திரை தேரோட்டத்தில், பக்தர்க ளுக்கு இஸ்லாமியர்கள் சர் பத், நீர், மோர் வழங்கி அன்பை வெளிப்படுத்தினார் கள். கோவை மாவட்டம், கோட்டைமேட்டில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடன மர் சங்கமேஸ்வரர் கோவிலில் 32 ஆண்டு களுக்குப் பிறகு சித்திரை திருவிழா தேரோட்டம் மத நல்லிணக்கத்தின் அடை யாளமாக சனியன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற அறி வுறுத்தலின்படி, இந்த ஆண்டு நடைபெற்ற இத்திருவிழா, கடந்த 4 ஆம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.  இதனிடையே, சனியன்று நடைபெற்ற தேரோட்டத்தில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம் குமர குருபர சுவாமிகள், பஞ்சலிங்கேஸ்வர சுவா மிகள், திமுக மாநகர் மாவட்டச் செயலா ளர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு, பெருமாள் கோவில், ஒப் பணக்கார வீதி, மாநகராட்சி அலுவலக வழி யாக மீண்டும் கோவிலை அடைந்தது. இந்நி கழ்வில் மதநல்லிணக்கத்தின் அழகிய பிரதி பலிப்பாக, மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமை யில் இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு நீர்,  மோர் வழங்கி அன்பையும், ஒற்றுமையை யும் வெளிப்படுத்தினர்.