tamilnadu

img

மாதர் சங்க மாநில மாநாடு கடலூரில் மினி மாரத்தான்

கடலூர், செப்.25- அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கத்தின் 16 வது மாநில மாநாடு கட லூரில் செப்டம்பர் 29,30 மற்றும் அக்டோபர் 1  ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.  இதன் ஒரு பகுதியாக ஞாயிறன்று (செப்.25) மினி மாரத்தான் போட்டி மஞ்சக் குப்பம் நகர அரங்கில் இருந்து துவங்கியது. இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.  இந்த மாரத்தான் போட்டி கடலூர் மஞ்சக்குப்பம் நகர அரங்கில் இருந்து துவங்கி தேவனாம்பட்டினம் சில்வர் பீச் வரை 4கி.மீ தூரம் நடைபெற்றது. பின்னர் தேவ னாம்பட்டினம் சில்வர் பீச்சில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் 10 பேருக்கு நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டது.

போட்டியில் பங்கேற்ற அனை வருக்கும்  மாநாட்டு வரவேற்புக் குழு சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளர் பி.தேன்மொழி வரவேற்றார்.  நிகழ்ச்சிக்கு மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி. மல்லிகா தலைமை தாங்கினார். குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் பி. வெங்கடேசன் வரவேற்றார். நிகழ்ச்சி யில் காவல்துறை ஆய்வாளர் குருமூர்த்தி,  மாநகராட்சி துணை மேயர் தாம ரைச்செல்வன், மாவட்ட விளையாட்டு அலு வலர் சிவா, மூத்த வழக்கறிஞர் எம்.சிவ மணி,  மாதர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.கிரிஜா, குடியிருப்போர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம். மருத வாணன், மக்கள் ஒற்றுமை மேடை அமைப் பாளர் ஆர். அமர்நாத், மாதர் சங்கத்தின் மாநகர செயலாளர் எஸ். சாந்தகுமாரி ஆகி யோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் கே. எஸ். ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி. ஆறுமுகம், பி. கருப்பையன், வி. சுப்பராயன், ராஜேஷ் கண்ணன், எஸ்.திருஅரசு, வி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;