tamilnadu

img

வ.உ.சி.யின் தியாகத்தை போற்றிடுவோம்: முதல்வர்

சென்னை, செப்.5- கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம் பரனாரின் 151 ஆவது பிறந்ததினத்தை யொட்டி சென்னை ராஜாஜி சாலை  துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலையின் அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதி நிதிகள், மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சுதேசி இயக்கத்திற்கு இலக்கணமாய்த் திகழ்ந்து, தியாகத்தின் முழு உரு வான செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம் பரனாரின் பிறந்தநாளில் அவரது தியாகத்தைப் போற்றிடுவோம். தற்சார்பு - தன்னிறைவு போன்றவற்றை உண்மையாக நெஞ்சில் ஏந்திச் செயல்பட்ட அவரது வழிநடப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

;