tamilnadu

img

விவசாயிகள் சங்க தலைவர்களுக்கு மயிலாடுதுறையில் உற்சாக வரவேற்பு

மயிலாடுதுறை, செப்.17 - நாகப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக தில்லியிலிருந்து ரயில் மூலம் மயி லாடுதுறை வந்தடைந்த அகில இந்திய  விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செய லாளர் ஹன்னன் முல்லா, அகில இந்திய தலைவர்   அசோக் தாவ்லே,  அகில இந்திய துணை செயலாளர் விஜூ  கிருஷ்ணன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான டில்லி பாபு ஆகியோருக்கு தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் சார்பில் மயிலாடு துறை மாவட்டச் செயலாளர் எஸ்.துரை ராஜ் தலைமையில் உற்சாக வரவேற்பு  அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் பி.சீனிவாசன், விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் ஜி.ஸ்டாலின், இந்திய தொழிற்சங்க  மையத்தின் மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன், மாவட்ட தலைவர் ஆர்.ரவீந்திரன் மற்றும் நிர்வாகிகள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  மாநில செயலாளர் ஏ.வி.சிங்காரவே லன், மாவட்ட செயலாளர் அறிவழ கன், ஒன்றிய செயலாளர் குமரேசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும், கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் முருகன், மாற்றுத்திற னாளிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலை வர் டி.கணேசன், மாதர் சங்க மாவட்ட  பொருளாளர் டி.வனரோஜா, பி.அம்பிகா  மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்ன ணியில் அங்கம் வகிக்கும் விவசாய  சங்கங்களின் நிர்வாகிகள், பொறுப்பா ளர்கள் தலைவர்களுக்கு உற்சாக வர வேற்பு அளித்து பொன்னாடை அணி வித்தனர். நிகழ்ச்சியின்போது அகில இந்திய  தலைவர்களுக்கு இயற்கை முறையில்  விளைவித்து தயார் செய்யப்பட்ட இயற்கை நாட்டு சக்கரைகளை அளித்து  மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

;