பாதுகாப்பு, மின்சாரம், எரிசக்தி துறைகளில் இந்தியா - இலங்கை ஒப்பந்தம்
இந்தியா - இலங்கைக்கு இடையே பாதுகாப்புத்துறையில் ஒத்து ழைப்பு, மின் உற்பத்தி மற்றும் எரி சக்தி உற்பத்தி மையம் தொடர்பாக 10 ஒப்பந்தங்களில் கையெழுத்தி ட்டுள்ளனர். தாய்லாந்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்ற பிறகு வெள்ளியன்று இரவு பிரதமர் மோடி இலங்கைக்கு சென்றார். சனிக்கிழமையன்று இலங்கை அரசின் மிக உயரிய விருதான இலங்கை மித்ர விபூஷணா விருதினை ஜனாதிபதி திஸாநாயக்க பிரதமர் மோடிக்கு வழங்கினார். இந்த பயணத்தில் இரு நாடு களுக்கும் இடையே டிஜிட்டல் முறை யில் பணப்பரிமாற்றம், கடன் மறு சீரமைப்பு, மருத்துவம், சுகாதாரத் துறைகளில் ஒத்துழைப்பதற்காக பத்து ஒப்பந்தங்களில் இருதரப்பும் கையெழுத்திட்டு உறுதி செய்துள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி குறிப்பாக இந்தியாவின் ஆத ரவுடன் இலங்கையின் சம்பூர் பகுதி யில் மின் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. இந்த திட்டம் தனது நண்பர் அதானியின் மின் உற்பத்தி நிறுவனம் மீண்டும் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் என்ப தற்காக மோடி இலங்கை ஜனாதிபதி யிடம் பேச்சுவார்த்தை நடத்தினாரா என கேள்விகளை கிளப்பியுள்ளது. குறிப்பாக இந்த சந்திப்பில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. இரு தரப்பினரும் மின் வர்த்தகத்திற்காக தங்கள் மின் பகிர்மான நிலையங்களை ஒன்றோ டொன்று இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இதில் அடங்கியுள்ளது. இந்தியாவின் 17 மில்லியன் டாலர் கடனுதவியுடன் இலங்கை முழுவதும் உள்ள 5,000 இந்து, பௌத்த கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மத நிறுவனங்களுக்கு சூரிய மின் உற்பத்தி தகடு அமைப்புகளை வழங்கும் திட்டத்தையும் இரு தலைவர்களும் துவங்கி வைத்தனர். இத்திட்டத்தின் மூலம் மத வழிபாட்டுத் தலங்கள் பயன்பெறுவதோடு, மொத்தம் 25 மெகாவாட் பசுமை மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். கடன் மறுசீரமைப்பு இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது 4 பில்லியன் டாலர்களை இந்தியா வழங்கியது. அதுமட்டுமின்றி கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 100 மில்லியன் டாலர்களுக்கு மேல் கடன்களை மானியமாக மாற்றி யுள்ளது. இந்தியாவின் இருதரப்பு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் இலங்கை மக்களுக்கு உடனடி உதவி மற்றும் நிவாரணம் வழங்கும் என்று இருநாடு தலைவர்களும் பங்கேற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் இலங்கைக்கு கொடுக்கப்படவுள்ள கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும், இலங்கையின் கிழக்கு மாகாணங்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக சுமார் 2.4 பில்லியன் இலங்கை ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை எதிர்க்கக் கூடாதாம் நிர்மலா சீதாராமன் பேச்சு சென்னை,ஏப்.5-
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை யாரும் எதிர்க்க வேண்டாம் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் கூறியுள்ளார். சனிக்கிழமை யன்று சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக விழாவில் பேசிய அவர் “ஒரே நாடு ஒரே தேர்த லை” கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம். நாட்டின் நலனுக்கு அனை வரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இதற்கான நடைமுறை துவங்கும் என்றும் அதன் பிறகு தேர்தல் ஆணையத்திடம் அதிகாரம் வழங்கப்பட்டு நடைமுறைக்கு வரும் என்றும் இதை நடைமுறைப்படுத்த குறைந்தது 2034 கூட ஆகும். அது வரை கால அவகாசம் தேவைப்படும் என்றும் கூறியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்க்கட்சிகள் கடு மையான விமர்சனத்தை முன்வைத்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நிர்மலா சீதாராமன் இவ்வாறு பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.