புதுதில்லி, ஜூலை 15- பிஎஸ்என்எல் ஊழியர்களின் நியாயமான கோ ரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய அரசாங்கம் முன் வர வேண்டும் என்று மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உள்ளிட்ட மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி யிருப்பதாவது: பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒன்றிய அரசாங்கத்தால் தங்களுக்கு அளிக்கப்பட ஒப்புக் கொண்ட கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றா மல் இழுத்தடிப்பதற்கு எதிராக ஜூலை 7 அன்று புது தில்லி, நாடாளுமன்ற வீதியில் பெரும் அளவிலான தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் நியாய மான கோரிக்கைகளை வென்றெடுக்க பல்வேறு போராட்ட வடிவங்களையும் அறிவித்திருக்கிறார்கள். ஒன்றிய அரசாங்கம், தகவல் தொழில்நுட்பத் துறையில் செயல்படும் இதர தனியார் நிறுவனங்களு க்கு 4ஜி சேவையை அனுமதித்து, தற்போது 5ஜி சேவையையும் அனுமதித்துள்ளது.
ஆனால் அதே சமயத்தில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை யையே இன்னமும் அளிக்காமல் அலட்சியப்படுத்தி வருவதுடன் பாகுபாடு காட்டி வருவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக பல லட்சக் கணக்கான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறு வனத்திலிருந்து, தனியார் நிறுவனங்களுக்குத் தங்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக இதில் பணியாற்றும் ஊழியர்களும் தங்கள் நியாயமான கோரிக்கைகளான ஊதிய விகிதத் திருத்தம், பதவி உயர்வு முதலானவற்றிற்காக காத்துக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசாங்கம் 2018இல் ஓர் ஊதிய பேச்சு வார்த்தைக் குழு (Wage Negotiating Committee) அமைத்தது. அது 2018 ஜூலை 27 அன்று கோரிக் கைகள் சம்பந்தமாக ஒருமித்த கருத்துக்கு (consen sus) வந்திருந்தது. எனினும் அது இன்னமும் அமல்படுத்தப்படவில்லை. ஒன்றிய அரசாங்கம் தன்னுடைய கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கையைக் கைவிட்டு, பிஎஸ்என்எல் ஊழியர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற முன்வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ந.நி.)