tamilnadu

திராவிடர் கழக தலைவர் கி. வீரமணிக்கு சிபிஎம் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை,டிச.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு: சிறு வயதிலேயே தந்தை பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து 10 வயதிலேயே மேடை பேச்சாளராக அறிமுகமானவர்  கி. வீரமணி அவர்கள். பெரியார் வகுத்திட்ட சமூக நீதி கொள்கைக்காக பெரியாருக்கு பிறகு தொடர்ந்து போராடி வருபவர். ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக தனது வாழ்க்கையில் 54 முறை சிறைப்படுத்தப்பட்டார். மத வெறி இந்துத்துவா சக்திகளை எதிர்த்த போராட்டத்தில் உறுதி குன்றாத போராளி. சிறந்த பேச்சாளர், எழுத்தா ளர் என பன்முகத் தன்மை வாய்ந்த வர். நெருக்கடிகளையும், சோதனை களையும் எதிர்கொண்டு சமூக நீதிக்காக உறுதியாக போராடி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உடல் ஆரோக்கியத்தோடு இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, சமூக நீதி பணியைத் தொடர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 89வது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

;