tamilnadu

img

கடல் நீர்மட்ட உயர்வு அடுத்த 5 ஆண்டிற்குள் சென்னை கடற்கரை பகுதிகள் மூழ்கும் அபாயம்

சென்னை, செப்.19- அடுத்த 5 ஆண்டிற்குள் 7 செ.மீ கடல் நீர்மட்ட  உயர்வால் 100 மீட்டர் கடற்கரை பகுதிகள் கடலில் மூழ்கக்கூடும் என சென்னை காலநிலை  மாற்ற செயல்திட்ட அறிக்கை வெளியிட்டுள் ளது.  சென்னை மாநகராட்சி, பருவநிலை மாற்ற  செயல்திட்ட அறிக்கையை சமீபத்தில் வெளி யிட்டுள்ளது. அதில், கடல் மட்ட உயர்வால் சென்னையில் ஒரு பகுதி மூழ்கும் என்றும், குடிசைப்பகுதிகள் பெருமளவு பாதிப்புகளை சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தப் பாதிப்புகளைக் கையாள்வதற்காக சி40 கூட்டமைப்பு, நகர்ப்புற மேலாண்மை மையம் (Urban Management Centre) ஆகியவற்றுடன் சேர்ந்து தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் செயல்திட்ட அறிக்கையை உருவாக்கியுள்ளன.  அந்த அறிக்கையில், 67 சதுர கி.மீ. பெரு நகர சென்னை மாநகராட்சி பகுதி, 2100-ஆம்  ஆண்டில் வெள்ளத்தில் நிரந்தரமாக மூழ்கும்.  இதனால், சென்னையில் சுமார் 10 லட்சம் பேர்  பாதிக்கப்படுவார்கள். மேலும், 17 சதவீத குடி சைப் பகுதிகளில் உள்ள (215 குடிசைப் பகுதி கள்) 2.6 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்.  28 எம்.டி.சி பேருந்து நிலையங்கள், 4 புறநகர் ரயில் நிலையங்கள், 18 மெட்ரோ ரயில் நிலை யங்கள், 3 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், இரண்டு அனல் மின்நிலையங்கள் ஆகிய கட்டு மானங்களும் 2100-ஆம் ஆண்டுகளில் வெள ளத்தில் மூழ்கும். 

அடுத்த 5 ஆண்டுகளில் கடல் மட்டம் 7 செ.மீ  உயரும் என்பதால், 100 மீட்டர் நீள கடற்கரை  பகுதி கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள ளது.  நீர் பற்றாக்குறை காரணமாக, 53 சதவீத  வீடுகள் குடிநீருக்கான வெளிப்புற ஆதாரங்க ளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். 2018-ஆம் ஆண்டில் சென்னையில் 14.38  மில்லியன் டன் கார்பன் - டை - ஆக்சைடு வெளி யிடப்பட்டுள்ளது. 2050-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு கார்பன் சமநிலையை அடையும் வகையில் செயல்திட்ட அறிக்கை தயாரிக் கப்பட்டுள்ளது.  கடல் மட்ட உயர்வால் பாதிக்கப்படுவதாக அடையாளம் காணப்படும் மக்களுக்கு கால நிலை மாற்றத்தைத் தாக்குப்பிடிக்கும் வித மான வீடுகளை கட்டமைத்தல், சுகாதார அமைப்புகளை உருவாக்குதல் ஆகிய இரு நோக்கங்களையும் அறிக்கையில் சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.  குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரை அதிகரிக்கும் வெப்பநிலை, நீர் பற்றாக்குறை, கடல்நீர் மட்டம் உயர்வு, வெள்ளம் மற்றும் புயல் ஆகிய அபாயங்களைக் கருத்தில் கொண்டு  அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிக்கையின் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்  துறை கூடுதல் முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹு கூறுகையில், “தரவுகளின் அடைப்படை யில் ஆராய்ந்து இந்த அறிவியல்பூர்வ அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரி வித்தார். மேலும், “தமிழ்நாட்டின் 1076 கி.மீ கடற்  கரையைக் கொண்டுள்ள 14 கடலோர மாவட்  டங்களில் ஒரு ‘உயிரி தடுப்புச்சுவர்’ உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.

;