tamilnadu

img

சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு

கோயம்புத்தூர், மே 13- சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க, கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  பெண் காவலர்களையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டுள்ளார்.  இதனிடையே கடந்த 6ஆம் தேதி மத்திய சிறையில் காவலர்கள் தாக்கிய தில், தனது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார்.  மனுவை விசாரித்த கோவை நான்கா வது குற்றவியல் நீதிமன்றம்,  சங்கருக்கான சிகிச்சையை வழங்க உத்தரவிட்டிருந்தது.  இதையடுத்து, கடந்த வெள்ளிக் கிழமை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து எக்ஸ்ரே மற்றும் பரிசோத னைகள் மேற்கொண்டதில், வலது கையில் இரண்டு இடங்களில் லேசான எலும்பு முறிவு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதற்காக மாவு கட்டு போடப் பட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  இந்த நிலையில், கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் சவுக்கு சங்கரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசா ரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை, கோவை நான்காவது நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சரவண பாபு அனுமதி வழங்கினார். விசாரணைக்கு பின்னர் இன்று (செவ்வாயன்று) மாலை 5  மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி சரவண பாபு உத்தரவிட்டார். இதை யடுத்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.  முன்னதாக, போலீசார் மருத்துவ மனைக்கு சவுக்கு சங்கரை அழைத்து வந்தபோது, தனது கையை சிறை அதிகாரி முறித்ததாகவும், தன்னை கொல்ல சிறையில் சூழ்ச்சி நடப்பதாகவும் கோஷம் எழுப்பினார்.

;