tamilnadu

img

உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் உடைப்பு 20 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை

தஞ்சாவூர், செப்.14 - தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உய்யக்கொண்டான் நீட்டிப்பு  வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட தால், தண்ணீர் வீணாகி காட்டுவாரி யில் செல்கிறது. இதனால் 20 ஏரி களுக்கு தண்ணீர் செல்லாததால் பாச னத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். காவிரி ஆற்றிலிருந்து மாயனூர் கதவணையிலிருந்து பிரிந்து வரும் தண்ணீர், திருச்சி வழியாக வாழ வந்தான்கோட்டை ஏரிக்கு வந்ததும், அந்த ஏரி நிரம்பி அங்கிருந்து உய்யக் கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் சுரக்குடிப்பட்டி ஏரி, தேவராயன் ஏரி, நவலூர் ஏரி, ஓலமுத்து ஏரி, நெப்பிஏரி, வெண்டையம்பட்டி ஏரி, வெட்டி ஏரி, காமத்து ஏரி, ஓடை ஏரி என 20-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது வழக்கம். இந்த ஏரிகள் ஒன்று நிரம்பிய பின், அடுத்த ஏரி நிரம்புவது வழக்கம். இந்த ஏரிகள் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பாச னம் செய்வது வழக்கம். இந்நிலை யில், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் தடுப்பணையில் 50 அடி நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் அனைத்தும் காட்டுவாரி மூலம் சோளகம்பட்டி சைபன் வழி யாக வெண்ணாறுக்கு செல்கிறது.

இத னால் மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் செல் வது தடைபட்டுள்ளதால், அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் கூறுகையில், “வாழவந்தான்கோட்டை ஏரியில் தண்ணீர் நிரம்பி அதிலிருந்து சுமார் 20 ஏரிகளுக்கு சங்கிலித் தொடர் போன்று ஒவ்வொரு ஏரியாக நிரம்புவது வழக்கம். தற்போது உய் யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் தடுப்பணை உடைந்ததால், தண்ணீர் அனைத்தும் வீணாகி காட்டுவாரியில் செல்கிறது. இந்த தண்ணீர் சோள கம்பட்டி சைபன் மூலம் வெண்ணா ற்றில் கலக்கிறது. தற்போது தற்காலிகமாக மண் மூட்டைகளை வைத்து பொதுப்பணித் துறை பணியாளர்கள் அடைத்தாலும், தண்ணீர் வெளியேறுவதை தடுக்க முடியாது. உடனடியாக போர்க்கால அடிப்படையில் தடுப்பணையை சீரமைத்து அப்பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

;